புரனமைப்பு என்ற பெயரில் பல அருமையான சோழர் கோயில்களை சிதைந்த நிலையில் பார்த்த எங்களுக்கு – புதிதாக எந்த கோயிலுக்கு சென்றாலும் முதல் வேலை கோபுர வாயிலை தாண்டியதும் வெளியில் சென்று பழைய வேலைபாடு ஏதாவது மிஞ்சி இருக்கிறாதா என்று பார்ப்பதே ! அப்படி ஏதாவது தென்பட்டால் குச்சி ஐஸ் கிடைத்த மாணவனைப்போல ஒரு ஆனந்தம் ! அதுவும் அங்கே சோழர் கால சிறு / நுண்ணிய சிற்பம் இருந்துவிட்டால் தேன்மிட்டாய் கிடைத்த மாதிரி தான். அப்படி ஒரு அனுபவம் புஞ்சை நல்துணை ஈஸ்வரம் சென்ற பொது கிடைத்தது.
பொதுவாக அடியில் இருக்கும் சிறு சிற்ப்பங்களை கண்டு கொள்வது எளிது – அவை புராண கதைகளை சொல்லும். இருந்தும் ஒரு சில இடங்களில் மேலே இருக்கும் சிறு தூண்களிலும் நுனின்ய சிற்ப்பங்கள் இருக்கும். கண்ணில் விளக்கெண்ணை விட்டு அவற்றை தேட வேண்டும்.
ஓவியம் தீட்டும் கலைஞர்களிடம் இருப்பதிலேயே எது மிகவும் கடினமான பனி என்று கேட்டால் – மனித உணர்சிகளின் பாவனை – அவற்றை வெளிகொனர்வதே மிகவும் மிகவும் கடினமான காரியம் என்பார்கள்.
நாட்டியம், இசை இவற்றை கல்லில் வடிப்பது ?
இந்த தூணின் ஒவ்வொரு அங்குலமும் அழகு பட செதுக்கிஉலான் அந்த சிற்பி. அந்த சிறு சிறு நகம் அளவு பூத கணங்களின் அசைவுகளில் கூட பாவனை தெரிகிறது.
இந்த வடிவங்களின் அழகு இந்த அளவில், இத்துணை கடினமான ஒரு பாவனையை இவ்வளவு லயத்துடன்
வெளிக்கொணர்ந்ததுதான்.
நண்பர் ஓவியர் முரளிதரன் அழகர் அருமையாக இந்த சிற்ப்பத்தை நமக்கு ஓவியம் மூலம் மேலும் ரசிக்க உதவுகிறார்.
மேளம் வசிக்கும் பெண், அந்த மேளத்தின் கனத்தால் கழ்துப் பட்டை தலையை சற்றே கீழே இழுக்க அதனை ஈடு கொடுக்க தந்து துடையில் அவள் வாத்தியத்தை முட்டு கொடுக்கும் இயல்பான சித்தரிப்பு மிகவும் அருமை.
ஆடல் மங்கை – புடைப்புச் சிற்பம் , அதுவும் அரை அங்குலம் தான் அளவு – அதிலும் டிரும்ப்ஹி பின்புறம் ஆடும் கோலம் ! அந்த அளவிலும் கனக்கச்சிதமான வடிவம், இடுப்பு துணியின் மடிப்பு என்று கலக்குகிறான் கலைஞன்.
பத்தாம் நூற்றாண்டின் முதல் பாதியில் வைத்த சிலை இன்றும் ஆயிரம் ஆண்டுகள் தாண்டியும் நம்மை நெகிழ்விக்கிறது. இதை பார்த்தாவது இதனை போன்ற மற்ற இடங்களிலும் இருக்கும் சிற்ப அதிசயங்களை நாம் ரசித்து போற்றி பாதுகாக்க குரல் எழுப்ப வேண்டும்.