நாளிதழ்களில் அவ்வப்போது சிலை திருட்டு பற்றி படித்துள்ளேன். ஆனால் இந்த படங்களை பார்த்த பின்னர் நானே சிதைந்து போனேன்.
938
புகழ் பெற்ற இந்த இடம் கம்போடியாவில் உள்ள கபால் சிபியான் என்ற இடம். இங்கே ஆயிரம் லிங்கம் உள்ள அருவி உண்டு… ஜல சயன பெருமாள் சிற்பம். என்ன அருமையான வேலைப்பாடு – ஒரு காட்டின் நடுவில் ரம்மியமான சௌந்தர்யத்தில் இயற்கை எழில் கொஞ்ச கொட்டும் அருவியின் தாளத்தில் பல நூற்றாண்டுகள் நித்திரையில் இருந்த கோலம்…நாபியில் இருந்து பிரம்மன், காலருகில் லெட்சுமி ….மூன்று மண்டபங்கள் – தனி தாமரைஆசனத்தில் மீண்டும் பிரம்மன் …அனைத்தும் கலைக்க பட்டு…சிலை திருட்டு>>>>>>
944946949
முதலில் லக்ஷ்மி முகம் …அப்படியே பெயர்த்து எடுக்க எப்படி தான் மனம் வந்ததோ ? ஐயோ ..நெஞ்சம் வெடிக்கிறது…இதை படம் எடுத்து அதிகாரிகளுக்கெல்லாம் அனுப்பி உள்ளனர்…அப்போதும் எதுவும் நடக்கவில்லை…அதாவது நல்லது நடக்க வில்லை…அத்துடன் நின்றார்களா மாபாதகர்கள் …அடுத்து பெருமாளையும் பெயர்த்து எடுத்து விட்டனர்…
942
இப்போது எதோ ஒரு நல்ல உள்ளம் அதை செப்பனிட்டு உள்ளது…எனினும் அந்த புராதானமான சிலை …..951