கலை அழகு தெய்வீகம். இதை மல்லையில் எங்கும் காணலாம். ஆனால் மிகவும் அருமை பஞ்ச ரத குழுமத்தில் இருக்கும் அர்ஜுன ரதம். இங்கு இருக்கும் இரு வடிவங்கள் மானுட வேலை பாடே அல்ல.
1085
ஒன்று யானை மேல் அமர்ந்து இருக்கும் இந்திரன் அல்லது ஆறுமுகன். யானை முன் வடிவம் மற்றும் அதன் மேல் அமர்ந்து இருக்கும் காட்சி -பக்க வாட்டில் செதுக்குவதே கடினம் – 3D முறையில் செதுக்குவது மிக கடினம்,அமானுஷ உயிரோட்டம்.
10811093
அதை அடுத்து நிற்கும் இரு பெண் உருவங்களோ,ஆயிரத்தி முன்னுறு ஆண்டுகள் காற்று மழை, மண் , கடல், மனிதன் என்று எல்லா சிதைவுகளையும் தாண்டி, இந்த பெண்ணின் நளினம், இடை சற்றே வளைந்து, கால்களை வேறு பக்கம் வளைத்து, ஒருபுறமாக திரும்பி நிற்கும் வடிவம், கரம் வளைந்து தன் கூந்தலை கோதி விடும் கோணம் – சற்றே வேட்கிய தலை – இது எல்லாம் போதாதென்று அந்த மோகனப் புன்னகை. இது பல்லவ சிற்பியின் கற்பனை திரனா அல்லது பல்லவ சபையில் இரம்பையும் மேனகையும் இருந்து உருவங்களுக்கு ஒப்பனை செய்தார்களா.
1090
1087
கடைசி படம் varlaaru.com இருந்து எடுத்து. தமிழ் ஆர்வலர்கள் கண்டிப்பாக இங்கே சென்று சிற்பகலை பற்றி மேலும் படியுங்கள்.