நண்பர் திரு சந்திர சூடன் கோபாலகிருஷ்ணன் அவர்களின் அரிய புகைப்படம் ஒன்று இந்த கலை சங்கிலி கல் சங்கிலி தொடரின் இரண்டாவது பாகம் எழுத தூண்டியது .
173517331737
நாம் முன்னரே காஞ்சியில் பார்த்த சங்கிலிகளை போலவே கன்னட தாளகாடு கோயிலிலும் உண்டு. அங்கே பல சுவாரசியமான தகவல்கள் மற்றும் சிற்பங்கள் உண்டு, எனினும் நாம் இன்று சங்கிலியை மட்டும் பார்ப்போம். இதை வடிப்பது எவ்வளவு கடினம், அதிலும் மேல் தள கல்லில் இருந்து தொங்கும் படி வடிப்பது, அதிலும் வளைந்து நெளிந்து செல்லும் நான்கு தலை படம் எடுக்கும் பாம்பின் ஒரு வளைவிலிருந்து தொங்குமாறு வடிப்பது, அப்பப்பா, அபாரம், அருமை.
1728
ஆனால் நாம் முன்னர் காஞ்சி வரதராஜ சுவாமி கோயில் கலை சங்கிலியை முழுவதுமாய் பார்க்கவில்லை. கல்லில் சங்கிலி அமைக்கும் அபார திறன் படைத்த சிற்பி, தன்னுடைய கலை திறனை நமக்கு காட்ட, அதை இன்னும் கடினமாக்கி, ( தங்க பதக்கம் பெற்ற பின் உலக சாதனைக்கு தாவும் வீரனை போல ) அந்த சங்கிலியின் கடைசி வளைவை எப்படி முடித்துள்ளான் பாருங்கள் – ஒரு பூவின் மொட்டு , அதில் நான்கு கொஞ்சும் கிளிகள் தொங்குமாறு செதுக்கி
1731
….மேலும் வாரத்தைகள் வர வில்லை.