விழுப்புரம் செஞ்சி சாலை . மதியம் 11.30 இருக்கும்
ரகோத்தமன்: ஆஹா , நல்ல வெய்யில். என்ன சார் முப்பது கிலோமீட்டர் வந்து இருப்போமா?
சந்துரு சார்: இல்லை, அதற்க்கு முன்னரே வலதுபுறம் திரும்ப வேண்டும்.!
நாராயணசுவாமி சார்: அப்படியா, இப்போ எவளோ ஆச்சு?
டிரைவர்: இருபத்தி ஏழு!
சதீஷ்: அதோ ஆசி போர்டு – தளவானூர் பாதை.
விஜய்: அப்பாடி , வந்தாச்சு. அந்த மலையா?
சந்துரு சார்: இல்லை இல்லை, ஆறு கிலோமீட்டர் இன்னும் போகணும்!
வெங்கடேஷ்: ஓ, அப்போ இந்த மலைத் தொடர் இல்லை..
சந்துரு சார்: ரோட்டில் இருந்தே தெரியும், ஆனால் கிட்டே ஓட்டிச்செல்ல வழி இல்லை. ஒரு இருநூறு மீட்டர் நடக்கணும்.
வெங்கடேஷ்: அதோ அதோ, இங்கே இருந்தே தெரியுதே. என்ன அற்புதமான இடம் – மகேந்திரர் சாய்ஸ் சூப்பர்… வயல் வெளி நடுவில் ரம்மியமான சௌந்தர்யம் மிக்க சரௌண்டிங் !!
சந்துரு சார்: வண்டிய இங்கேயே நிறுத்து பா, இனிமே நடந்து தான் போகணும்.
ஊர்க்காரன்: என்னாங்க, ஏங்க -வயல்ல நடக்கறீங்க, வரப்புல நடங்க. வயல்ல வெத வெதச்சு இருக்கோம்!
விஜய்: சரி சரி , ஆஹா பம்ப்பு செட்டு ஓடுது. வெயில்லுகு ஒரு குளியல் போட்ட அற்புதமா இருக்கும் , வரும்போது பார்ப்போம்.
அசோக்: என்ன பெரிய பாறை!!.
வெங்கடேஷ்: சூப்பர் ஸ்பாட்
சந்துரு சார்: ஆமாம், இதுக்கு மேலே தான் சமணர் படுக்கை இருக்கு, அப்புறம் போவோம்.
விஜய் : என்ன சார், கிரில் கேட் எல்லாம் இருக்கே . பூட்டு வேற தொங்குது
சந்துரு சார்: ஆள் பக்கத்துலே தான் எங்கேயாவது இருப்பான்!!
ஊர்க்காரன்: சாமி, சாவி என்கிட்டே தான் இருக்கு. இதோ தொறந்து வுடறேன். இதை நான் தான் பார்த்துக்கொள்கிறேன் .. சம்பளம் ஒண்ணும் கிடையாது. சும்மா தான். பூட்டி வைக்கலைன்னா டவுன் கார பசங்க வந்து ….
விஜய்: புரியுது புரியுது!!
விஜய்: என்ன கொடுமை சார். அழகிய மஹேந்திர தூண்களில் இப்படி கேட் போட்டு இருக்காங்க. அதுக்கு ஒரு ப்ளூ பெயிண்ட் வேறு – பெயிண்ட் அடிச்சவன் அவசரத்துல எப்படி பண்ணி இருக்கான் பாருங்க.
அசோக்: விஜய் , மேலே பாருங்க அது என்ன
சதீஷ்: விஜய், அங்கே பாருங்க மகர தோரணம். அதற்கு மேலே ஒரு சிவகணம்.
விஜய்: அசோக், அதுதான் கபோதம் , அதனுள் இருப்பது கூடு , அதற்குள் வெவ்வேறு முகங்கள் – எல்லோரா குடைவரைகளில் இது போல பார்த்த நினைவு. அற்புத மகர தோரணம் சதீஷ். இதே போல கம்போடியாவில் எங்கோ பார்த்த நினைவு. தேடிப் பார்க்கணும்.
அசோக் : குடவரை காவலர்கள் அருமை. என்ன கம்பீரம் அவர்கள் நிற்க்கும் தோரணை சூப்பர்.
விஜய்:அமாம், இடது புறம் உள்ள காவலரை பாருங்கள். கையில் கதை, மண்டகபட்டு போலவே. உடை அலங்காரம் எல்லாம் அற்புதம். உள்ளே இருக்கும் கருவறை காவலர்களை பார்க்க வேண்டும்.
சதீஷ்: உள்ளே பாருங்க விஜய், அமைப்பு புதுசா இருக்கு
வெங்கடேஷ்: அதோ பாருங்க , பெரிய கிராக், விரிசல்..
ரகோத்தமன்: உள்ளே நுழைந்ததும் ஒரு ஹால் மாதிரி வெட்டி இருக்காங்க, உள்ளே சென்று இடது புறம் திரும்பினா தான் சன்னதி
விஜய்: ஆமாம் ரகு, அதோ பாருங்க உள்ளேயே இரு மஹேந்திர தூண்கள். இங்கே உள்ள காவலனை பாருங்கள், சற்றே திரும்பி நிற்பது போல நிற்கின்றான். அவனது உடை ஆபரங்களை பாருங்கள். அற்புதம் அற்புதம்.
ஊர்க்காரன்: சாமி , ஆரத்தி காட்டட்டுமா
எல்லோரும்: இதோ வந்துட்டோம் . அற்புத தரிசனம்.
விஜய்: சதீஷ், இந்த சாமிக்கு பேர் என்ன
சதீஷ்: புக்கில் பார்க்கிறேன். சத்ருமல்லேஷ்வராலயம்
விஜய்:கல்வெட்டு ஏதேனும் இருக்கா?
சந்துரு சார்: இருக்கே, இதோ பல்லவ கி்ரந்தம்
சதீஷ்: இதோ படிக்கிறேன்
குன்றின் மீது உள்ள சத்ருமல்லேஷ்வராலயம் எனும் இக்குடவரைக் கோயிலைத் தம் படைவலியால் அரசுகளை எளியவர்களாக்கிய நரேந்திரனான சத்ருமல்லன் உருவாக்கினான்
விஜய்: சத்ருமல்லன் – அருமையான பெயர் . அசோக் இங்க பாருங்க, இங்கேயும் தூண்ல டிசைன் போட ஆரம்பிச்சுட்டாங்க. ஆனால் தூணின் மேலே வெறுமனே இருக்கு .
வெங்கடேஷ்: வாங்க மேல போய்ப் பார்ப்போம்
நாராயணசுவாமி சார்: ரொம்ப செங்குத்தா இருக்கா?
விஜய்: பரவாயில்ல வாங்க சார், படி வெட்டி இருக்காங்க, அசோக் நீங்களும் வாங்க
வெங்கடேஷ்: ஆஹா, அற்புத லொகேஷன் . என்ன குளு குளுன்னு இருக்கு இந்த வெயில் காலத்திலும்!.இப்ப மத்தியானம்னு தெரியவே இல்லை
அசோக்: கட்டுச் சாத்து கூடை இங்கே கொண்டு வந்துஇருக்கணும்
வெங்கடேஷ்: இப்போ சொல்றீங்களே , ஆனா சம்மையா இருந்துருக்கும்.
விஜய்: இங்கே இருந்து பார்த்தா நம்ப வந்த வழி பூரா தெரியுது.
வெங்கடேஷ்: ஆமாம். வரவங்களுக்கு தெரியாது, இங்க இருக்கறவன் கண்ணுக்குத் தெரியும். மறைந்து வாழ்வதற்கு நல்ல ஃசேப்டி ஏரியா!!
…..அவங்க ஏன் மறைந்து வாழனும் ???
விஜய்: இந்த சமணர் படுக்கை நல்லாதான் இருக்கு. கண்ண அப்படியே இழுக்குது.
சந்துரு சார்: வாங்க வாங்க , கிளம்புவோம் . மெதுவா பாத்து இறங்கி வாங்க
அப்படியே அந்த பம்புசெட்டில் ஒரு குளியல் ……பசிக்குது
அடுத்து இலக்ஷிதாயதனம் – அது தான் மண்டகப்பட்டு