குழப்பும் சிற்பங்கள் – நண்பருடன் ஒரு உரையாடல்

நண்பர்களே, இந்த தளத்தில் சிற்பக்கலை பற்றி சாட் உரையாடல்களை நடை பெற நண்பர் ‘திரு’ அவர்கள் அமைத்துக்கொடுத்தது எதற்காக என்றால், அது பின்னூட்டம் விட தயங்கும் நண்பர்கள் தங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர உதவும் என்பதாலேயே அமைத்தோம். அதன் படி ஒரு உரையாடலை இங்கு உங்கள் பார்வைக்கு ஒரு பதிவாக மாற்றி இடுகிறேன்.

நண்பர் பெயரை வெளியிடவில்லை.

நண்பர்: உங்கள் முந்தைய பதிவின் ஒன்றில் இருந்து சோமநாதபுரம் பற்றி இன்னுமொரு தளத்திற்கு சென்றேன்

http://bp0.blogger.com/_xUJrI6cswLg/SF_jI-vYY3I/AAAAAAAAAQQ/UKpNmgOUwAY/s1600-h/DSC07354.JPG

vj: மன்னிக்கவும் , எந்த பதிவு , மற்றும் நான் யாருடன் உரையாடுகிறேன் என்று முதலில் சொல்லுங்கள்

நண்பர்: நான் @@@@@ , சிற்பக்கலை பற்றி @@@@@@ இல படிக்கிறேன். ஹனுமான் பாண லிங்கம் சிற்பம் , சோமனாத்பூர்

vj: ஓ, அப்படியா. மிக்க மகிழ்ச்சி.அந்த பதிவா ! நண்பர் திரு ஆனந்த் அவர்களது பதிவு.


சிற்பத்தில் ஹனுமான் பாண லிங்கத்தை ஏந்தி நிற்கும் காட்சி. ராமபிரான் ஹனுமனை கைலையில் இருந்து சிவனின் லிங்கத்தை எடுத்து வருமாறு கூறுகிறார்.( ராமேஸ்வரத்தில் இராவணனை கொன்றதனால் பெற்ற ப்ரஹ்ம்மஹத்தி தோஷம் விலக பூஜை செய்ய). ஹனுமான் வர தாமதம் ஆனதால், ராமபிரானும் சீதாபிராட்டியும் மணலில் லிங்கம் பிடித்து பூஜையை ஆரம்பித்துவிட்டனர். இதை கண்டு வருத்தம் அடைந்த ஹனுமனை சமாதானம் செய்ய, அவருக்கு ஒரு வரம் அளித்தார் – ராமர். இனி அங்கு பக்தர்கள் முதலில் ஹனுமனின் பாண லிங்கத்தை வழிபட்ட பின்னரே தனது லிங்கத்தை வழிபடவேண்டும் என – இன்றுவரை அப்படியே ராமேஸ்வரத்தில் இரண்டு லிங்கங்கங்கள் உள்ளன “

நண்பர்: ஆனால் எங்கள் ஆசிரியரின் கூற்றுப் படி, இந்த சிற்பம் இன்றும் ஒரு புதிராகவே உள்ளதாமே?

vj: அப்படியா, இந்த சிற்பம் ஹனுமான் என்பதில் குழுப்பமா அல்லது அவர் கையில் வைத்திருக்கும் பாண லிங்கத்தில் சர்ச்சையும் குழப்பமுமா? சிற்பத்தை இன்னும் ஒரு முறை அருகில் சென்று பார்ப்போமே ( நன்றி திரு அர்விந்த் படங்களுக்கு )

நண்பர்: அதுவா, சர்ச்சை அவர் கையில் வைத்திருக்கும் சங்கு மற்றும் சக்கர ஆயுதங்களால் என்று நினைக்கிறேன்.


vj: அப்படியா, இதில் ஒன்றும் வினோதம் தெரியவில்லையே.

நண்பர்: அப்படியா

vj: சரி, ஒரு கேள்வி கேட்கிறேன். சென்னை எழும்பூர் அருங்காட்சியகம் வெண்கல சிலைகள் அணிவகுப்பு பார்த்ததுண்டா

நண்பர்: இல்லை, அடுத்து நாங்கள் அதை தான் படிக்க போகிறோம்.

vj: சரி, இப்போதைக்கு இந்த படத்தை பாருங்கள்( நன்றி ஃபிலிக்கர் நண்பர் )

http://farm3.static.flickr.com/2063/2410943558_f9be866992.jpg?v=0


நண்பர்: நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று கொஞ்சம் புரிவது போல் உள்ளது

vj: அப்படியா, இது நந்தி – ஈசனின் மான் மழு ஏந்தி நிற்கும் சிலை. சரி, இப்போது உங்களை இன்னும் கொஞ்சம் குழப்புகிறேன். இந்த சிற்பத்தை பாருங்கள். தஞ்சை பெரிய கோயில் சிற்பம். ( படங்களுக்கு நன்றி அர்விந்த் )

நண்பர்: அய்யோ , இது இன்னும் குழப்புகிறதே !

vj: இதில் என்ன குழப்பம், ஹனுமான் இங்கே ஈசனின் மான் மழு ஏந்தி நிற்கிறார்!!

நண்பர்: ஒரு கேள்வி கேட்டதற்கு இப்படியா ?

vj: அப்படி இல்லை, முதலில் சோமநாதபுரம் சிற்பம் ஹனுமான் தான். பாண லிங்கம் கதை மிகவும் தொன்மை வாய்ந்த கதை. அதனுள் இப்போது செல்லவில்லை. மேலும் சிவ-விஷ்ணு வாகனங்கள் தங்கள் எஜமானர்களின் ஆயுதங்களை தாங்கி நிற்கும் என்பதற்கு அந்த நந்தி ஒரு அத்தாட்சி. ஹனுமான் ஈசனின் அவதாரம் என்று பல இடங்களில் பாடல்கள் உள்ளன. அதனை குறிப்பதே இந்த தஞ்சை சிற்பம்.

நண்பர்: சரி, இதை எங்கள் ஆசிரியரிடம் சொல்லிப்பார்க்கிறேன்.
vj: நன்றி, எனினும் நாங்கள் சாமானியர்கள், முறையாக சிற்பம், கலை பயின்றவர்கள் அல்ல. ஏதோ எங்களுக்கு கிடைத்தவற்றை, படித்த நூல்களை கொண்டு விளக்குகிறோம். இதை வைத்து தங்கள் ஆசிரியருடன் பிரச்சினையில் மாட்டிக்கொள்ளாதீர் ??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *