சென்ற மடலின் தாக்கம் அப்பப்பா , கார சார விவாதம் நடைபெறுகிறது. அதன் இரண்டாம் பாகம். மீண்டும் ஒருமுறை சர்ச்சைக்கு உரிய சிற்பத்தை பார்ப்போமே.
இது ஹனுமான் பாண லிங்கத்தை கொண்டு வந்ததை குறிக்கிறதா?.
ஆம் என்பதற்கு
ராமேஸ்வரம் தல புராணம், சிற்பத்தின் முக தோற்றங்கள்.
இல்லை என்பதற்கு
ஹனுமனின் வால் எங்கே , அருகில் இருக்கும் இரு மாந்தர்கள் யார், சங்கு மற்றும் சக்கரம் எதற்கு ( இதை விளக்க சீனு அவர்களது நல்ல வாதங்கள் )
சரி, இது வேறென்ன சிற்பமாக இருக்கலாம்.
மச்ச அவதாரமாக இருக்குமோ
ஆனால் அங்கேயே மச்ச அவதார சிற்பமும் உள்ளதே.
இதை பற்றயும் நாம் விவாதம் செய்தோம், முடிவில் சிற்பத்தின் கண்களை கொண்டு இந்த சிற்பம் மச்ச அவதாரம் என்ற முறையில் எடுத்துக்கொண்டோம்.
மீண்டும் ஒருமுறை அருகில் சென்று அதையும் பார்ப்போம் ( நன்றி அர்விந்த் )
இந்த சிற்பத்தையும் முந்தைய சிற்பத்யும் ஒப்பிடுபோது இரண்டும் கண்டிப்பாக ஒரே உருவம் இல்லை என்று தான் கூறவேண்டும்
வராஹ அவதாரமாக இருக்குமோ
இருக்கலாம். எனினும் வராஹம் முக தோற்றம் வேறு விதமாக இருக்குமே. ( இந்த அஹோபிலம் சிற்பத்தை பாருங்கள் )
புவியை உருண்டையாக இந்த சிற்பத்தின் காலத்தில் காட்ட வில்லை (புவி உருண்டை என்பது அந்தக் காலத்திலேயே நம் முன்னோர்கள் சொல்லிவிட்டார்கள் என்பது வேறு விஷயம்), அப்படியே இருந்தாலும் சங்கையும் சக்கரத்தையும் அற்புதமாக வடித்த சிற்பி அதை மட்டும் முட்டையை போல வடிவத்தில் ஏன் வடித்தான் என்பது சரியாக வரவில்லை.
553055385543
அருகில் இருக்கும் இரு மாந்தர், பொதுவாக எல்லா சிற்பங்களிலும் அவர்கள் வருவர் போல உள்ளது. இதோ இந்த ப்ரஹ்மா சிற்பம் பாருங்கள்.

சரி, அடுத்து இன்னும் ஒரு சிற்பம் நம் ஆய்வுக்கு – கூர்ம அவதாரம்.

அருகில் சென்று பார்ப்போம்.
கச்சபேசுவரர் வடிவில் சைவ ஆகமங்களில் இந்த கதை வந்தாலும் – ஒருமுறை சிற்பத்தை ஒப்பிடுவோம்.
எதுவுமே பொருந்தவில்லையே. இதனால் எனது கணிப்பு ஹனுமனையே ஒட்டி செல்கிறது. ( கண்டிப்பாக கண்கள் முக்கிய ஆவணம் )
சிதைவடைந்த சிற்பங்கள் பல நேரங்களில் நம்மை குழப்புவது உண்டு. அது போல இதோ ஒரு சிற்பம்.
யாரப்பா , இது என்ன சிற்பம் என்று சொல்லுங்களேன். உடல் கணபதி , தலை ??
அருகில் செல்வோம்.
ரொம்ப குழம்ப வேண்டாம். இது ஒன்றும் நவீன கணபதி அல்ல. அருகில் சென்று தடயங்களை தேடுங்கள்.
உடைந்த துதிக்கையின் மிச்சம் – அவனுக்கு பிடித்த மோதகத்தை இன்னும் பிடித்துள்ளதே . இது நமது கணபதி தான்.