சமீபத்திய நாளேட்டில் தொல்லியல் துறை ஒரு கோடி ருபாய் செலவில் தஞ்சை பெரிய கோயில் அகழியை செப்பனிடப் போகிறது என்ற செய்தி வாசித்து மகிழ்ந்தேன் செய்தி.உடனே நினைவு சில ஆண்டுகளுக்கு முன்னர் பிரிட்டிஷ் கருவூலத்தில் உள்ள சில மிக அரிய புகைப்படங்களைப் பார்வையிட்டதும். அதிலும் குறிப்பிடும் படியாக ஒரு படமும்!!!
இந்த படங்கள் ஆர்வலர்களுக்கு ஒரு புதையல். இப்போது அகழியை செப்பனிடுவது பற்றி பேச்சு இருப்பதால் அந்த நாளில் அது எப்படி இருந்தது என்ற பாருங்கள். ( அகழியில் நீர் இருந்தாலும் ஆலயத்தின் நிலைமை கொஞ்சம் மோசம் தான்!! )
1800 மற்றும் 1900 இல எடுத்த படங்கள் . ( நன்றி பிரிட்டிஷ் லைப்ரரி )
என்னடா வெறுமனே பழைய புகைபடங்களை கொண்டு ஒரு பதிவை இட்டு ஒப்பேத்துகிறானே என்று எண்ணுகிறீர்களோ?. பொறுமை!. இதோ வருகிறது சுவாரசியமான படம் ஒன்று…

ஆண்டு 1921, சரியாக சொல்ல வேண்டும் என்றால். ஏப்ரல் மாதாம் இரண்டாம் தேதி. திரு எ வில்பூர் சாயர் எடுத்த படம்.
உற்று பாருங்கள். அகழியின் சுவரில் ஒரு சிற்பம் உள்ளதே – தெரிகிறதா ?

இது என்ன சிற்பம்? அது இப்போது எங்கே போனது? யாரிடம் கேட்பது.. யார் பதில் சொல்வார்கள்?
ரோடா மிக திறமையாக இன்னும் ஒரு சிற்பத்தை படத்தில் கண்டுபிடித்துள்ளார்
