தூண் சிற்பங்கள் என்றாலே ஒரு தனி அழகு தான் – அதுவும் கதை சொல்லும் தூண்கள் என்றால் கேட்கவே வேண்டாம். பல புராண கதைகள் இன்று நாம் மறந்தே பொய் விட்டோம். அதனால் பல சிற்பங்களை அவற்றின் கதையை அறிந்து ரசிக்க முடிவதில்லை. இதுபோல மறந்த கதையை சொல்லும் பேரூர் தூண் சிற்பத்தை இன்று நாம் பார்க்கிறோம்.
கடைகள் மறைத்து நிற்கும் இந்த தூணைத் தேடி செல்ல வேண்டும். இல்லையேல் அகப்படாது. நமக்கென்று உதவ பிரிட்டிஷ் பட களஞ்சியம் உள்ளது.

கண்டுபிடிக்க இயலவில்லையா. இதோ
கனக சபை படிகளை கொண்டு தூண் எங்கே உள்ளது என்பதை தெரிந்துக்கொள்ளலாம். இன்றோ கடைகளுக்கு நடுவில் கயிறு கட்டி…

எனினும் இந்த உடைந்த தூண் கண்ணில் பட்டது.
ஏன் என்று தெரிகிறதா.
ஓவியர் பத்மவாசன் அவர்களுடன் பேசும்போது, தான் அந்த தூணை கூட வரைந்து வைத்துள்ளேன் என்றார். இதோ அவரது ஓவியம்.
சரி, இது என்ன கதை? முழு கதையை ஸ்ரீரங்கம் சேஷ ராயார் மண்டப தூணில் பார்த்தோம். படிக்க இங்கே சொடுக்கவும்.
இந்த தூண் எப்படி உடைந்தது. இப்போது நாம் பார்ப்பது மாற்று தூணோ ?