மீண்டும் பெரிய கோயில் விமானம். சென்ற மடலில் பெரிய கோயில் விமான நந்தி அளவை பற்றி எழுதினேன். அதில் பெரிய கோயில் நிழல் பற்றி எழுதியவுடன் பல நண்பர்கள் அதை பற்றி கேட்டனர்.
பெரிய கோயில் விமானத்தின் நிழல் பற்றி பல புத்தகங்கள் கூட அதன் நிழல் தரையில் விழாது என்ற கருத்தை பல காலமாக சொல்லி வருகின்றனர். சோழர்கள் தங்கள் புகழை மெய்கீர்த்திகளில் எழுதி விட்டு சென்றனர். அவர்களது உன்னத படைப்பான பெரிய கோயிலுக்கு ஏன் இந்த பொய் கீர்த்தி.
இந்த நிழல் விழுமா கேள்வியை பலர் திரித்தும் கூறுவர் – முழு விமானத்தின் நிழல் விழாது , , மேல் இருக்கும் கலசத்தின் நிழல் விழாது , காலையில் விழாது, மாலையில் விழாது, மதியம் விழாது என்று பல உண்டு.
மீண்டும் திரு.பாலசுப்பிரமணியம் அவர்கள் உதிவியுடன் படங்களை இடுகிறேன்.
படங்களை பாருங்கள். நிழல் விழும் – விழுகிறது
மேலும் படிக்க
http://www.hindu.com/lf/2004/03/30/stories/2004033001340200.htm
http://www.hindu.com/2004/04/07/stories/2004040703010300.htm