சிலைத் திருட்டு – பாகம் பத்தொன்பது – சிங்கப்பூர் உமை

சென்ற வாரம் ஆஸ்திரேலியா நமது இரண்டு கலைப்பொக்கிஷங்களை திரும்பக் கொடுத்தது. எங்களுக்கு கிடைத்த முதல் வெற்றி இது. எனினும் இன்னும் ஆயிரம் ஆயிரம் பொக்கிஷங்கள் திருடுபோய் உள்ளன – இவை அனைத்தையும் திரும்பப் பெற ஒரு மாபெரும் முயற்சி தேவை.

திரும்ப வந்த சிலைகள் இந்த ஆண்டு ஏப்ரல் மாதமே நம் நாட்டிற்கு வந்திருக்க வேண்டும். இன்னும் பல பொக்கிஷங்கள் அதே அருங்காட்சியகத்தில் சரியான ஆவணங்கள் இல்லாதாதால் மாட்டிக் கொண்டு இருக்கின்றன. இவை அனைத்தும் பொய்யான தஸ்தாவேஜுகள் கொண்டு விற்கப்பட்டுள்ளன.

அர்தனாரி சிலை – விருத்தாசலம் கோயிலில் இருத்தும் நடராஜர் திருமேனி முழு ஆதரங்களுடன் எங்களால் நிருபணன் செய்ய பட்டதனால் மட்டுமே திரும்ப வந்துள்ளன. அருங்காட்சியகங்களுக்கு இது ஒரு எச்சரிக்கை மணி – உலகம் சுருங்கி வருகிறது – பல ஆர்வலர்கள் இணையம் மூலம் இணைத்து செயல் பட்டு இந்த திருட்டுகளை வெளி கொண்டு வருகிறோம். இணயும் அவை உண்மையை மூடி மறைக்க முடியாது.

நண்பர்கள் பலரும் இந்த முயற்சியில் நாங்கள் எப்படி இணையலாம் – எப்படி உதவ முடியும் என்று கேட்ட வண்ணம் இருக்கிறார்கள். அவர்களுக்கு இன்று ஒரு எடுத்துக்காட்டு..

அர்தனாரி சிலை பற்றிய தகவல்களை முதல் முதலில் பகிரங்கமாக நாங்கள் வெளி இட்டவுடன் பல பத்திரிகைகள் பின்ன்தொடர்ந்தன – ஆஸ்திரேலியா வானொலி , தி ஆஸ்திரேலியன் , The தி ஹிந்து , தி ஹிந்து

இதனைக் கண்ட அமெரிக்க தோழி ஒருவர் – நம் நாட்டின் கலை பற்றி அலாதி பிரியமும் தேர்ச்சியும் பெற்ற ஆர்வலர் தானே உதவ முன்வந்தார் . ஜூன் 2013 மாதம் அவர்களிடத்தில் இருந்து ஒரு குரியர் வந்தது. சென்ற பத்து ஆண்டுகளில் சுபாஷ் கபூர் ஆர்ட் ஒப் பாஸ்ட் பத்திரிகைகளில் வெளியிட்ட விளம்பரங்களை எல்லாம் தேடி பிடித்து வெட்டி செய்த சேகரம் அது.

அதை பிரித்து பார்த்தவுடனே ஒரு அதிர்ச்சி…

மறக்க முடியாத சோழர் திருமேனி ஆயிற்றே. முதல் முறை பார்த்தவுடனே மயங்கியவன் ஆயிற்றே. அதுவும் ஓவியமாக தீட்டி எனது அறையில் தினமும் கண்விழிக்கும் பொது பார்க்கும் சிற்பம் ஆயிற்றே.

உடனே தமிழக காவல் துறை இணையதளத்தில் சென்று பார்த்தேன் . மூன்றாவது உள்ள சிலை நெருடியது.

கோப்பை இணையத்தில் ஏற்றும் பொது படந்தின் அளவில் யாரோ தவறு செய்து விட்டனர். சரி செய்து கிடைத்த படம் இதோ.

ஆம் அதே சிலை தான். ஸ்ரிபுராந்தன் உமை

அதே நிறத்தில் இன்னும் ஒரு தோழி 2006 ஆம் ஆண்டு ஆர்ட் ஒப் பாஸ்ட் விற்பனை பட்டியல் தேடி அனுப்பினார்கள்.



சிங்கை ACM அருங்காட்சியகம் இந்த திருமேனியை 2007 ஆம் ஆண்டு வாங்கியது தெரிய வெந்தது.

உடனே இந்திய காவல் துறை மற்றும் அருங்காட்சியகத்திற்கு தகவல் தெரிவித்தோம். அனைத்து ஆதாரங்களையும் உடன் அனுப்பினோம். பதில் வரும் என்று நம்பிய எங்களுக்கு ஏமாற்றம் தான்.

அதிஷ்டவசமாக அமெரிக்க நீதிமன்றத்தில் சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் கபூரின் மேனேஜர் கொடுத்த வாக்குமூலம் திருட்டை பகிரங்கமாக்கியது.


“During the period from on or about January 2005 to November 2006, one Uma Parameshvari (known at the “$650,000 Uma for Singapore”), owned by the Central Government of India, was stolen from the Sivan Temple in India’s Ariyalur District. During the period January 2006 to on or about January 2007, defendant and other co-conspirators shipped the $650,000 Uma for Singapore, from India to the United States. On or about February 2007, defendant and other co-conspirators arranged for the sale and transport of the $650,000 Uma to the Asian Civilisations Museum in Singapore.”

உடனே சிங்கை அருங்காட்சியகம் சிலையை காட்சியில் இருந்து நீக்கியது. மேலும் அது கபூரிடத்தில் இருந்த மேலும் பல கலைப்போருல்களை வாங்கிய தகவலும் வெளிவந்தது.

இந்த இழுவை தந்திரம் திருட்டு பொருளை வாங்கி விட்டு திணறும் உலகில் உள்ள பல பிரபலமான அருங்காட்சியகங்கள் பழக்கம் போல உள்ளது. இதில் இந்த கலை கோமான் சொல்வதை கேளுங்கள்


” Art consultant ————– suggests that there may also be alternatives to repatriation, even if an artefact is found to have been illegally removed.

She says: “Sometimes, the lawful owners of the artefacts do not have the resources to build climate-controlled environments, to conserve and restore old artefacts, to present exhibitions that attract large visitorships, or to fund scholarship on these artefacts.

“In this context, I would say that it should be an option for the museum to discuss having the artefacts stay on in a loan arrangement and perhaps to present these works jointly in public exhibitions or publications.”
– See more at: http://www.straitstimes.com/the-big-story/case-you-missed-it/story/sniffing-out-booty-20140214#2″

இந்தியா ஒரு வல்லரசு – அதற்கு தனது குல தனங்களை பாதுகாக்க வாக்கு இல்லாமல் இல்லை – இவை எங்கள் தெய்வங்கள் – ஆயிரம் ஆண்டுகள் தங்கள் ஆலயங்களில் அழகாக இருந்த இவர்களை – சரியான படி ஆய்வுகள் மேற்கொள்ளாமல் – பல கோடி ரூபாய் பணம் வாரிக் கொடுத்து – அப்புறப்படுத்தி – திருட்டை ஆதரித்து – இன்று அவற்றுக்கு குளிர் சாதனம் எங்களால் மட்டுமே கொடுக்க முடியும் என்று சொல்வது மிகவும் கேவலமாக உள்ளது. இவை திருமேனிகள் – கருவறைக்குள் இருந்த தெய்வங்கள் – இவற்றுக்கு உங்கள் குளிர் சாதன பெட்டி தேவை இல்லை. எங்கள் அன்பு இதயங்கள் போதும்

ஆஸ்திரேலியாவை போல சிங்கையும் கூடிய விரைவில் அணைத்து களவு பொருட்களையும் திரும்ப கொடுக்கும் என்று நம்புவோம். மேலும் முன்னர் நாம் பார்த்த சோமஸ்கந்தர் சிலையை பற்றிய விவரங்களையும் சிங்கை ACM வெளியிட வேண்டும். இதுவரை இந்த சிலை அவர்கள் கபூரிடத்தில் வாங்க வில்லை என்று மட்டுமே சொல்லி வருகின்றனர். சரியான விவரங்கள் தராமல் இருப்பது மேலும் ஒரு கொள்ளை கூட்டத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதை தடுக்கிறது.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

சிவபுரம் – ​​சொல்லப்படாத கதை, பாகம் 3

பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் – அப்படி பல வருடங்களுக்குப்பின் சிவபுரம் சிலைகளை திருடிய ஸ்தபதி செய்த நகலே நமக்கு ஒரு முக்கிய துப்பு தந்துள்ளது.

இந்த சிவபுரம் சிலை திருட்டு பற்றிய முதல் பாகத்திலும் மற்றும் இரண்டாம் பாகத்திலும் களவு போன ஆறு சிலைகளில் இரண்டு சிலைகளுக்கும் அமெரிக்காவில் உள்ள நோர்டன் சைமன் அருங்காட்சியகத்துக்கும் உள்ள தொடர்பை நிரூபித்தோம். நடராஜர் பெரும் போராட்டத்திற்குப் பிறகு தமிழகம் திரும்பினார் எனபது மட்டுமே அனைவருக்கும் தெரியும். இன்றும் மற்ற ஐந்து சிலைகள் காணவில்லை என்று தான் காவல் துறை தஸ்தாவேஜுகள் சொல்கின்றன. சென்ற இரு பதிவுகள் மூலம் சிவபுரம் சோமஸ்கந்தர் திருமேனி இன்றும் அமெரிக்காவில் உள்ளது என்பதை முக்கிய குறிப்புகளுடன் நிரூபணம் செய்தோம்.

மற்ற நான்கு சிலைகள் என்னவாயின ? தொலைத்த இடத்தில தானே தேட வேண்டும் – காவல் துறை பதிவு செய்த குற்றப் பத்திரிகையின் படி சோமஸ்கந்தர் உடன் இன்னும்“Thirugnanasambandar, Pillaiar and two Amman” கண்டுபிடிக்க முடியவில்லை.

மேலும் இந்த சிலைகள் 1954 – 1956 இடைப்பட்ட தருவாயில் திருடப்பட்டன. ஸ்தபதி உதவியுடன் நகலை கோயிலுக்கு கொடுத்துவிட்டார்கள். . “The trustees of the temple wanted to repair the idols and this work was entrusted to Ramasamy Sthapathy of Kumbakonam in the year June 1954. In the year 1956 Thilakar of Kuttalam and his brother Doss induced Ramasamy Sthapathy to part with the original Natarajar and 5 other idols and to substitute the same with fake idols. “

துரதிஷ்ட வசமாக திரு ஸ்ரீனிவாசன் அவர்களது நூலில் நடராஜர் / சோமஸ்கந்தர் படங்களை போல ஒரிஜினல் அம்மன் சிலைகளின் படங்கள் இல்லை. இவை இல்லாத பட்சத்தில் எதை கொண்டு தேட முடியும் ?

அதற்க்கு விடை – பாண்டி பிரெஞ்சு இன்ஸ்டிடுட் 15th June 1956 மற்றும் 16th Nov 1957 எடுத்த படங்கள். சென்ற பதிவில் திருட்டு ஸ்தபதி ஒரிஜினல் போலவே சோமஸ்கந்தர் சிலை மற்றும் நடராஜர் சிலைகளை செய்தான் என்பது தெரிய வந்தது.

அதே போல பிரெஞ்சு இன்ஸ்டிடுட் எடுத்த மற்ற சிலைகளின் படங்களை தேடிய பொது இந்த தனி அம்மன் சிலை கிடைத்தது.

நோர்டன் சைமன் அருங்காட்சியக பிற சிலைகளுடன் ஒப்பிட்டு பார்த்த பொது இந்த சிலை கிடைத்தது

Parvati, c. 1000
India: Tamil Nadu, 975-1025
Bronze
32-1/2 in. (82.6 cm)
The Norton Simon Foundation
F.1972.10.S
© 2012 The Norton Simon Foundation

இதில் நாம் கவனிக்க வேண்டிய ஒன்று – இந்த சிலையை அவர்கள் சேர்த்த ஆண்டு – 1972, அதே ஆண்டில் தான் சிவபுரம் நடராஜர் மற்றும் சோமஸ்கந்தர் சிலைகளும் சேர்க்கப்பட்டன.

இரு சிலைகளையும் ஒன்றாக வைத்து பார்க்கும்போது கண்டிப்பாக ஒன்றை ஒத்தே மற்றொன்று செய்யப் பட்டுள்ளது என்று தெரிகிறது.

எதோ ஒரு அலட்சியத்தாலோ என்னவோ – நடராஜர் வடிவத்தை நகல் செய்த பொது காட்டிய ஆர்வத்தை சோமஸ்கந்தர் மற்றும் அம்மன் சிலைகளை செய்த பொது ஸ்தபதி காட்ட வில்லை என்று தோன்றுகிறது. பல இடங்களில் வித்தியாசம் தெளிவாகவே தெரிகிறது – எனினும் இரு சிலைகளையும் ஒன்று சேர வைத்து பார்த்தால் தானே குட்டு வெளிப்படும் என்று அவன் நினைத்திருக்கலாம். மேலும் செப்பு சிலை வார்ப்பது என்பது எவ்வளவு கடினம் – ஆயிரம் ஆண்டு சோழர் கலை செல்வத்தை நகல் எடுப்பது கடினம் தானே.


சோமாஸ்கந்தர் சிலை போல இந்த அம்மன் சிலைக்கு நம்மிடத்தில் நேரடி ஆவன படங்கள் இல்லை என்றாலும் நடராஜர் மற்றும் சோமஸ்கந்தர் சிலைகள் திருடிய முறை, சென்றடைந்த இடம் என்று அனைத்தையும் வைத்து பார்த்தால் – கண்டிப்பாக இந்திய அரசு இந்த வழக்கை மீண்டும் திறக்க வேண்டும். யாருக்கு தெரியுமோ இல்லையோ திருட்டு பொருளை வாங்கி இன்றும் காட்சிக்கு வைத்திருக்கும் அந்த அருங்காட்சியகத்தின் அதிகாரிகளுக்கு உண்மை தெரியும் !!


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

சிவபுரம் ​சோமாஸ்கந்தர் – ​சொல்லப்படாத கதை, பாகம் 2

மனித வாழ்வில் ஒரு விஷயம் 70 ஆண்டுகள் கால தாமதம் ஆவது என்பது பெரிய குற்றம், அதுதே சமயத்தில் ஆயிரம் ஆண்டுகள் புகழ்பெற்று நின்ற ஒரு சிலை களவு போனதை பற்றிய தகவல் என்றால் இந்த 70 ஆண்டுகள் சொற்ப காலம் தான். முன்னர் நாம் பார்த்த சிவபுரம் சிலை திருட்டின் தொடர்ச்சி இந்தப் பதிவு. – ஒரு திடுக்கிடும் தகவல் – சிவபுரம் நடராஜர் சிலை திருடு போய்விட்டது – அதற்கு பதில் ஆலயத்தில் இருப்பது ஒரு நகல் என்று நமக்கு சொன்னது ஒரு பிரிட்டிஷ் காரர் – கலை உலகையே அவரது இந்த செயல் உலுக்கியது.

அவர் கொடுத்த குறிப்பு தான் சிவபுரம் நடராஜர் சிலை தாயகம் திரும்ப காரணம் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் 1965 ஆம் ஆண்டு Early Cola Bronzes என்ற நூலில் சிவபுரம் நடராஜர் சிலை திருட்டை பற்றிய தகவலை வெளியிட்டார்.

ஆனால் இப்போது முதல் முறையாக – அவரே எழுதிய இன்னும் ஒரு குறிப்பு – இந்த சிலை திருட்டு நடராஜர் சிலையுடன் முடியவில்லை – அதன் கூடவே களவு போன சோமஸ்கந்தர் சிலையும் அதே அருங்காட்சியகத்தில் இருக்கின்றது என்று அவரே ஒப்புக்கொள்ளும் சாசனம் இதோ !!

Marg Vol 48. No.4 June 1997 – EARLY CHOLA BRONZES IN THE NORTON SIMON MUSEUM – Douglas Barrett.

It is interesting to read the General Editor’s Note: “ The late Douglas Barrett wrote this article for the late Norton Simon soon after his visit to the museum in Pasadena, California, in 1978. However, the article was never published. Marg is pleased to publish it now through the generosity of the Norton Simon Museum and Mrs. Mary Barrett. Mr. Barrett was an authority on Cola Bronzes and we feel that his comments on the selected masterpieces will be much appreciated by Indian Art historians. One of the Bronzes ( figure 9) is no longer in the collection and now belongs to a European Collector. Some faithful readers of Marg may recognize a few of the others as they were published in the fifties in the magazines. “

1978 நோர்டன் சைமன் சென்று சிலைகளை பார்த்து அவர் எழுதிய குறிப்பு – யார் கண்ணிலும் இருபது ஆண்டுகள் படாமல் – பின்னர் மார்க் பத்திரிகையில் வெளியாகிறது

முழு குறிப்பைக் கீழே காணலாம் – நமக்கு வேண்டியது 85 ஆம் பக்கம் – அவர் கூறுவது “ Hence, the importance of the remarkable Somaskanda in the Museum ( figures 3 and 4). The Somaskanda, together with a standing Ganesa and the famous Nataraja , formed part of a hoard discovered at Sivapuram ( Tanjavur district). It was published in its uncleaned state by P. R. Srinivasan and with the Ganesa and Nataraja, dated to the middle of tenth century AD.”

மேலும் இந்த திருட்டில் இதுவரை வெளிவராத ஒரு கோணம். பாண்டி பிரெஞ்சு இன்ஸ்டிடுட் சிவபுரம் ஆலயத்தில் உள்ள சிலைகளை 15th June 1956 மற்றும் 16th Nov 1957 படம் பிடித்துள்ளனர். அவர்களுக்கு அப்போது சிலைகள் களவு போய்விட்டன என்பதும் அவர்கள் படம் பிடிப்பது ஸ்தபதி செய்த நகல் என்று தெரியாது. இது வரை யாருமே பார்க்காத அந்த படங்கள் இதோ – இந்த படங்கள் இந்த சிலை கடத்தல் வழக்கில் முக்கிய சாட்சியங்கள் ஆகப்போகின்றன.

டௌக்லஸ் பர்ரெட் 1965 இல் சிவபுரம் சென்றபோது இவற்றை தான் பார்த்திருக்க வேண்டும்.


ஸ்தபதி 1954 ஜூன் மாதத்திலேயே தன கைவரிசையை காட்டிவிட்டார் !! எனவே ஒரு பார்வையிலேயே டௌக்லஸ் பர்ரெட் தன் இடத்தில இருந்த திரு . P.R. ஸ்ரீனிவாசன் அவர்களது நூலில் உள்ள படங்களுடன் ஒப்பிட்டு இவை நகல் என்று சொல்லிவிட்டார்.


திருட்டு ஸ்தபதி நடராஜர் சிலையை ஒரிஜினல் சிலை போல வடிக்க மிகவும் முயற்சி செய்துள்ளான். எனினும் சோமஸ்கந்தர் மிகவும் மோசமான நகல். நடராஜர் மேல் தான் அனைவர் கவனமும் இருக்கும் என்ற நம்பிக்கையோ என்னமா.

சோமஸ்கந்தர் சிலைகளை பார்த்தவுடனே வித்தியாசம் தெரிகிறது.


எனினும் நகல் பார்ப்பதற்க்கு ஒரிஜினல் போல இருக்க அவன் எடுத்த முயற்சி தான் நமக்கு மேலும் இந்த வழக்கில் உதவி செய்ய போகிறது……. அதை அடுத்த பதிவில் தொடருவோம்…

இதுவரை நாம் பார்த்தவற்றை கொண்டு ஒன்று தெளிவாக தெரிகிறது – இந்திய அரசு நோர்டன் சைமன் அருங்காட்சியகத்துடன் 1976 இல் நடராஜர் சிலை பற்றி ஒப்பந்தம் செய்துகொண்டது. அதன் படி பத்து ஆண்டுகள் அமெரிக்காவில் அந்த சிலை இருந்து விட்டு மீண்டும் இந்தியாவுக்கும் திரும்பி விட்டது. ஆனால் கூடவே களவு போன இந்த சிலை இன்னமும் அங்கேயே சிக்கி உள்ளது. நமது காவல் துறை இந்த வழக்கை இவ்வாறு முற்றுப்புள்ளி வைத்து முடித்துள்ளது “All accused arrested and convicted. There is no information about the remaining idols “. இப்போது இந்த தகவல் கண்டிப்பாக அந்த அருங்காட்சியகத்தில் 1978 முதல் இருந்திருக்க வேண்டும். தெரிந்தே திருட்டு பொருளை ….

முழு மார்க் குறிப்பு :










Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

சிலைத் திருட்டு – பாகம் பதினாறு – சிலைகள் பதுக்கி இருந்த கிடங்கியில் இருந்து ….

இந்தியாவின் தேர்தல் முடிவுகள் வெளி வந்துவிட்டன – சமீப காலத்து தேர்தல் சரித்திரத்தில் முதல் முறையாக பெரும் பலத்துடன் ஒரு கட்சி, கூட்டணி அரசியல் என்ற சங்கிலியை உடைத்து தனி பெரும்பான்மை பெற்றுள்ளது. நாட்டை வல்லரசாக மாற்றும் நோக்கம் முதலிடம் பெற வேண்டும் என்றாலும் நமது கலைச்செல்வங்களைப் பாதுகாப்பதிலும் களவு போனவற்றை முறையே விரைவில் திரும்பப் பெறுவதிலும் ஆழ்ந்த கவனம் செலுத்த வேண்டும். இது ஒரு மதவாத நோக்கம் அல்ல — நாகப்பட்டினம் புத்தர், ராஜஸ்தான் பளிங்கு ஜினர் சிலை போன்றவை சோழ நடராஜருடன் நாடு திரும்ப வேண்டும். பல அருங்காட்சியங்கள் தங்களிடம் இருப்பது திருடப்பட்ட பொருள் என்று தெரிந்தும் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் திகைக்கின்றன. – நமது பாரம்பரிய செல்வங்களை முறைப்படி பட்டியல் இடப்படவில்லை – கட்டிக்காக்க வேண்டிய அதிகாரிகள் எந்த துரித நடவடிக்கை எடுப்பதாகவும் தெரியவில்லை.

சென்ற வாரம் CBS News இந்த செய்தியை ஒளிபரப்பியது – அமெரிக்காவில் கபூர் தொடர்பான புலனாய்வில் கிடைத்த துப்பு கொண்டு அவர்களை குயீன்ஸ் என்ற ஒரு வைப்பு கிடங்கியை சோதனை செய்தபோது…

“A CBS News crew was with HIS agents in March when they followed an informant’s tip and searched a storage facility in the New York City borough of Queens. They found hundreds of items worth an estimated $8 million.

The items were allegedly stolen by Indian dealer Subhash Kapoor, a man international authorities say has been smuggling artifacts for decades. He is currently on trial after pleading not guilty to looting and smuggling charges.”

அப்போது வெளியான படங்களில் ஒரு சிற்பம் கண்ணில் எங்கோ பார்த்த மாதிரி இருந்தது.



இதே சிற்பம் திரு கிரிட் மன்கொடி அவர்கள் இணையத்தில் வெளியிடும் திருடு போன சிலைகள் பற்றிய வலைத்தளத்தில் பார்த்த நினைவு …

ஆம் அதே சிலைதான் – ஆசி பாதுகாக்கப்பட்ட இடம் !!


” The temple of Vishnu’s Boar incarnation at Kari Talai is a large complex of the eleventh century, under the protection of the Archaeological Survey of India.

Nine sculptures were stolen from this remote site during the night of 16/17 August 2006. They are a Vishnu Torso, a Divine Couple, Ganesha, Amorous Princely Couples and Apsaras………………The sculptures were stolen from a centrally protected site. ASI has records of all these sculptures……….”

இந்த சிலைத் திருடுவது தமிழகம் மட்டுமே சார்ந்த ஒன்றில்லை – இந்திய எல்லைகளையும் தாண்டி பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், கம்போடியா என்று பல நாடுகள் தங்கள் கலை பொக்கிஷங்களை இழந்துள்ளன. முப்பது ஆண்டு காலம் தொடர்ந்து நடை பெற்றுவரும் திருட்டு ! அரசாங்கம் இதற்கென சரியான குழு அமைத்து அதில் கை தேர்ந்த வல்லுனர்களை அமர்த்தி விரைவில் செயல்பட வேண்டும் – இல்லை என்றால் இப்படி ஏதோ ஒன்றிரண்டு அப்படி இப்படி கண்ணில் பட்டால்தான் ! எனினும் திரு கிரிட் போன்ற சான்றோர் தங்கள் பணியை மனம் தளராமல் செய்து வருவது கொஞ்சம் நம்பிக்கை தருகிறது.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

சிலைத் திருட்டு – பாகம் பதினைந்து – 1916 புத்தகம் கொடுக்குத துப்பு ..

தமிழக கோயில்களில் உள்ள சிலைகளை முறைப்படி படம் எடுத்து வைப்பதன் முக்கியத்துவத்தை நிரூபிக்க இதனை விட ஒரு பெரிய உதாரணம் தேவை இல்லை.

1916 ஆண்டு வெளிவந்த நூல் என்றவுடன் ஏனோ தானோ என்று தான் இருக்கும் என்று எண்ணி வேக வேகமாகப் பக்கங்களை புரட்டினேன் – செப்புத் திருமேனிகள் படம் கண்ணில் பட்டது. எங்கேயோ பார்த்த நினைவு.

South-indian images of gods and goddesses (1916)

இலவசமாக தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.

பக்கம் 109 (129 in the pdf) உள்ள படம் தான் எனது ஆர்வத்தை தூண்டியது.

சோமஸ்கந்தர் சிலை – உலோகம் – சிவன்கூடல் என்ற குறிப்பு மட்டுமே இருக்கிறது.

பொதுவாக சோமஸ்கந்தர் வடிவம் ஒரே பீடத்தில் அமர்ந்திருப்பது போலவே இருக்கும் – இந்த சிலையில் வெவ்வேறாக வார்த்து இருப்பது கவனிக்கத்தக்க அரிய விஷயம். இப்படி உலோகத்தில் செய்வது கடினம் – இரண்டு பீடங்களை ஒரே அளவில் வார்க்க வேண்டும் – அதில் உள்ள கோடுகள் உட்பட அனைத்தும் ஒரே சீராக இருக்கவேண்டும்.

இதுவே நமக்கு தரும் முக்கிய துப்பு/குறிப்பு. தற்போது சிங்கை அருங்காட்சியகத்தில் இருக்கும் சிலை மட்டுமே இது போல இருக்கிறது. இந்த சிலையை அருங்காட்சியகம் 2000 ஆம் ஆண்டு வாங்கியது. யாரிடம் இருந்து வாங்கினார்கள் என்ற விவரங்கள் இல்லை.

இரு சிலைகளையும் ஒப்பிட்டு பார்ப்போமா?









இரண்டு சிலைகளும் ஒன்றே என்பது தெளிவாக தெரிகிறது. அக்கம் பக்கம் கேட்டு பார்த்தால் இந்தக் கோயிலில் இப்போது ஒரு சிலை கூட இல்லை. இந்தக் கோயில் பற்றி வேறு எந்த நூலிலும் தகவல்கள் இல்லை. இந்த நூலிலும் வேறு எந்த சிலை படமும் இல்லை.

இவற்றைக் கொண்டு அதிகாரிகள் மேலே துப்பு துலக்கினால் பல உண்மைகள் வெளி வரும்!! இந்த திருட்டு உறுதி செய்யப்பட்டால் இந்த சிலை திருட்டு கும்பல் 2000 ஆண்டுக்கு முன்னரே இந்த செயல்களை செய்தார்கள் என்பதும், இன்னும் பல கோயில் சிலைகளை திருடி விற்ற செயல்கள் அம்பலம் ஆகும்.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

பளிங்கு ஜினர் சிலை வாங்கிய விதம் வெளிபடுத்தும் அருங்காட்சியகத்தின் கண்துடைப்பு நடவடிக்கை

நமது முயற்சிகள் பயனளிக்க துவங்கிவிட்டன. நமது அரசாங்கம் நமது சிலைகளை மீட்க கோரிக்கை விடுத்துள்ளது – விருதாச்சலம் அர்தனாரிதிரும்ப தரவும். ஸ்ரிபுரந்தன் நடராஜர் திரும்ப தரவும் மேலும் ABC மூலம் ஆஸ்திரேலியா அருங்காட்சியகம் கபூர் இடத்தில இருந்து வாங்கிய மற்ற பொருட்கள் பட்டிய பல முக்கய தகவல்கள் /தடயங்கள் நமக்கு கிடைத்துள்ளன.

குறிப்பாக இந்த ஜின பளிங்கு சிலை மவுண்ட் அபு , ராஜஸ்தான் மாநிலம்.

Seated Jina 1163 Sculpture, marble
55.8 h x 45.2 w x 23.1 d cm
Purchased 2003
Accession No: NGA 2003.478

இந்த சிலை இரு பாகங்களை கொண்டது என்று தெளிவாக தெரிகிறது. தீர்த்தங்காரர் சிலை வேறு – சுற்றி இருக்கும் தோரணம் வேறு

இப்படி இருக்க நமக்கு இந்த ” Due diligence report” கிடைத்துள்ளது. இதில் இந்த சிலை இரு பாகங்களாக 2003 இல் USD 125,000 வாங்கப்பட்டது என்று தெரிகிறது.



மேலும் முந்தைய உரிமையாளர் என்று

” bought in Delhi by Sudanese diplomat Abdulla Mehgoub, between 1968 and 1971
with subhash Kapoor of Art of the Past, New York, from 2002 or before”

மேலும்

” Signed letter of provenance from Raj Mehgoub stating that the jina sculpture and arch were purchased in India between 1968 and 1971 by her husband Abdulla Mehgoub, dated 25th Match 2003.
– Expert opinion on the sculpture’s quality and authenticity written by Dr Vidya Dehejia
– Copy of a published article about the sculpture in Arts of Asia, vol 33, no. 6. 2003″

இந்த குறிப்பு பல கபூர் பொருட்களுக்கு அவரே பொய் பத்திரங்கள் தயாரிக்க உபயோகம் செய்த யுக்தி என்று இப்போது தெரிகிறது – இதை பற்றி மேலும் தெரிய விரும்புவோர் நண்பர் வலைப்பூவை பார்க்கவும்

மீண்டும் அவர்கள் சொல்லும் ஆர்ட் ஒப் ஆசியா குறிப்பு ஒரு விளம்பரமே.

மேலும்

“New provenance information found

A comparable jina was found in the sales catalogue for Christie’s sale number 9481 (18 October 2002), South Kensington, London. Close examination suggests that the NGA Jina is the same object sold at the christie’s sale. The Christie’s catalogue description corresponds to the NGA Jina in terms of size and Materials and its image matches the NGA sculpture exactly.
…..

The details surrounding this, such as the consignor and purchaser, are ye to be confirmed. This information suggests the the provenance letter supplies by Art of the Past was fraudulent, but supports the possibility that the sculpture was legitimately acquired.(sic) It is also possible that the sculpture was purchased at the Christie’s sale by Raj Mehgoub, but this seems unlikely given other information about kapoor.”

இது மிகவும் ஆச்சரியம் அளிப்பதாய் உள்ளது. சாதாரணமாக கூகிள் செய்தாலே இந்த தகவல் கிடைக்கிறது.

இதற்காக எந்த பட்டியலையும் வாங்க தேவையே இல்லை. இந்த மேலும் ஒரு முக்கியத் தகவல் கிடைக்கிறது இந்த சிலை சொற்ப்ப விலை $ 1543 – $2315 ஏலம் விடப்பட்டு வெறும் $ 6,889. க்கு மட்டுமே விலை போனது !!

12th October 2002 $ 6889 விலை போன சிலை – ஒரு இணைய தேடல் மூலம் எளிதாக கிடைக்கும் தகவல் ஏன் அப்போது ஆஸ்திரேலியா அருங்காட்சியகத்துக்கு கிடைக்கவில்லை. ஒரு தோரணம் சேர்த்து எப்படி விலை இப்படி மள மள வென ஏறியது ? பொதுவாக இரு பொருட்கள் என்று கணக்குக் காட்டும் அருங்காட்சியகம் விலையை மட்டும் ஏன் சேர்த்து காட்டுகிறது ?

ஒரு வேளை இது தான் சரியான விலை என்றால் ஏலம் விட்ட விலை அதற்கு சரியான பத்திரங்கள் இல்லாததால் குறைவாக இருந்ததோ? பொய்யாக கபூர் தயார் செய்து கொடுத்த பத்திரம் தான் விலை ஏறக் காரணமா?

மேலும் அந்த அறிக்கையை படிக்கும் போது இந்த சிலையை நமக்குத் திருப்பித் தரும் எண்ணம் இல்லை என்று தெளிவாக தெரிகிறது. எனவே நண்பர்கள் – இந்த பதிவை தங்களுக்கு தெரிந்த வட இந்திய மற்றும் சமணர்களுக்கு அனுப்பி, பத்திகைகளில் இதன் படம் வர உதவி செய்ய கோரிக்கை விடுகிறோம்.

இதே போன்ற பல சிலைகள் -ராஜஸ்தானிய கோயில்களில் புதிதாக செய்து வைத்திருப்பது தெரிய வருகிறது. அப்படி ஏன் செய்தார்கள் – சிலைகள் களவு போயினவா – எப்போது – பழைய படங்கள் குறிப்புகள் இருந்தால் சேகரிக்க வேண்டும்.



இப்படி நாம் ஏதாவது செய்து இந்த சிலை மற்றும் தோரணம் களவு போனதை நிரூபணம் செய்தால் ஒழிய சிலை திரும்பாது. !!


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

சிலைத் திருட்டு – பாகம் பதினான்கு – நிறம் மாறிய நடராஜர் எழுப்பும் கேள்விகள்

உலகெங்கிலும் இந்த சிலைத் திருட்டு வழக்கை பலரும் ஆவலுடன் தொடரும் இந்தத் தருவாயில் இந்த “வினோதமான ” கேள்வியை முன்வைக்கிறோம்.

நாம் முன்னரே பார்த்த ஸ்ரீபுரந்தன் நடராஜர் மற்றும் உமை .

இங்கே நாம் கவனிக்க வேண்டியது இரண்டு கோயில்களின் சிலைகள் களவு போயின – ஆனால் ஒரே கோயிலில் தான் திருட்டு நடந்தது. சுத்தமல்லி கோயில் பாழடைந்து இருந்தமையால் ஸ்ரீபுரந்தன் கோயிலுக்கு சிலைகள் ” பாதுகாப்பு ” கருதி எடுத்து வரப்பட்டன.


நண்பர் சேசிங் அப்ரோடைடி வலை தளம் உதவியுடன் இன்று நமக்கு சிலை திருடர்கள் சிலையை திருடியவுடன் எடுத்த படங்கள் – தமிழகத்தில் ஒரு வீட்டில் எடுத்த படங்கள் கிடைத்துள்ளன.


தற்போது ஆஸ்திரேலியாவில் இருக்கும் நடராஜர் சிலை படைகளுடன் ஒப்பிட்டுப் பாருங்கள்


சாமானியருக்கே இது புரிந்து விடும். சிலை நிறம் மாறியுள்ளது. இந்த பச்சை நிறம் படினா என்று அழைக்கப்படுகிறது. இது வெண்கல சிலை பல நூற்றாண்டுகள் பூமிக்கு அடியில் இருக்கும்போது தானாக வரும். இரும்பு துரு பிடிப்பது போல – ஆனால் இந்த “துரு ” சிலைக்கு நல்லது. மேலும் எந்த வித மாற்றமும் ஏற்படாமல் இந்த படினா சிலையை கவசம் போல காக்கும். பொதுவாக தினமும் பூஜை – அபிஷேகம் என்று கோயிலில் இருக்கும்போது இந்த மாதிரி வராது. நீங்கள் ஒரு கேள்வி கேட்கலாம் – இந்த கோயில்கள் பல காலம் பூட்டி இருந்தனவே ? பூஜை நடந்திருக்காதே என்று. நல்ல கேள்வி – ஆனால் இதற்க்கு உமை பதில் அளிக்கிறாள்.




இந்த படங்கள் ஆர்ட் ஒப் தி பாஸ்ட் 2008 பட்டியலில் உள்ள படங்கள். அதே ஆண்டு தான் ஆஸ்திரேலியா இந்த நடராஜர் சிலையை ஐந்து மில்லியன் டாலர் கொடுத்து வாங்கியது. இதில் இருந்து நடராஜர் சிலை வண்ணம் மாற்றப்பட்டது என்று தெளிவாக தெரிகிறது.

ஆம் – இன்றைய காலத்தில் இந்த பச்சை நிறத்தை அமிலங்கள் கொண்டு ஒரே நாளில் ஏற்படுத்த முடியும். நீங்கள் புதிய சிலை வாங்கப் போகையில் எந்த வண்ணத்தில் வேண்டும் என்று ஸ்தபதியிடம் சொன்னால் -அவர் கருப்பு பச்சை தங்க நிறம் என்று எந்த நிறத்தில் வேண்டும் என்றாலும் மாற்றி கொடுக்க முடியும்.

ஆனால் இயற்கையாக பல நூற்றாண்டு எடுக்கும் படினாவுக்கும் இன்ஸ்டன்ட் படினாவுக்கும் வித்தியாசம் உண்டு. மேலோட்ட பார்வைக்கு இந்து தெரியாது – ஆனால் மைக்ரோஸ்கோப் கொண்டு பார்த்தால் எளிதில் கண்டுபிடித்து விடலாம். மேலும் ஐந்து மில்லியன் கொடுத்த சோழர் கால சிலையை வாங்கும் முன்னர் அது உண்மையிலேயே ஆயிரம் ஆண்டு சிலையா அல்லது நேற்று செய்து வண்ணம் ஏற்றப்பட்ட சிலையா என்று சோதித்துப் பார்த்து தானே வாங்க வேண்டும் ??

அடுத்தது – இப்படி ஐந்து மில்லியன் சிலைக்கு வண்ணம் ஏற்றுவது மிகவும் நுண்ணிய வேலை – சரியாக செய்யவில்லை என்றால் சாயம் வெளுத்து விடும். இதற்கு தேர்ச்சி பெற்ற நிபுணர்கள் இருக்கிறார்கள். மேலும் லண்டன் நகரம் தான் இதற்கு பெயர் போன இடம். நமது பத்தூர் மற்றும் சிவபுரம் நடராஜர் சிலைகள் மீட்டது அவை பராமரிப்புக்கு கனடா மற்றும் அமெரிக்காவில் இருந்து லண்டன் வந்தபோது இன்டர்போல் உதவியுடன் செயல் பட்ட இந்திய அரசின் நடவடிக்கை தான்.

அடுத்து நாம் பார்க்க வேண்டிய ஒன்று – இந்த சிலை திருட்டு பற்றியகுற்றப் பத்திர்க்கை . Subhash Chandra Kapoor vs Inspector Of Police on 3 April, 2012


The said idols were presented before the Sea Customs Authority, Chennai so as to export it to xxxxxxxx Gallery and was cleared by customs on 6.3.2008 and were exported by ship to Hong Kong. They were further redirected to one xxxxxxxxxxxxxxxx Company at U.K. by direction from the petitioner. “

இந்த டைம்ஸ் ஒப் இந்திய பதிவிலும் இந்த நிறுவனம் பெயர் உள்ளது

அப்படி என்றால் இந்த நடராஜர் நிறம் மாறியது லண்டனிலா ??

ஏன் நடராஜருக்கு மட்டும் பச்சை நிறம் …அந்த நிறத்தில் வேண்டும் என்று யாரவது கேட்டார்களா ?


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

சிலைத் திருட்டு – பாகம் பதின்மூன்று – அமெரிக்காவில் ஒரு அநாதை விநாயகர்

நெஞ்சு பொறுக்குதில்லையே. கடவுள் என்று போற்றி வழிபடப்பட்ட எங்கள் விநாயகரை களவாடி அயல் நாட்டினருக்கு கலைப் பொருள் என்று பொய் சொல்லி விலைக்கு விற்றுவிட்டானே என்று கதறிக் கொண்டிருக்கும்போது இப்படி ஒரு பெரும் அவமானம். நமது நாட்டின் பண்பாடு கலை கலாசாரம் அனைத்துமே சூறையாடப்படும்போது பெரிய பொறுப்பான பதவியில் இருக்கும் இவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்பி இருக்கும்போது இப்படி ஒரு அடி.

டோலேடோ அருங்காட்சியகத்தில் இருக்கும் இந்த விநாயகர் சிலை திருட்டுப் பொருள் என்று தக்க ஆதரங்களுடன் பதிவு ஏற்கனவே செய்துவிட்டோம்.

மேலும் அதே போல அவர்கள் இடத்தில இன்னும் ஒரு பொருள் – பாலர் காலத்து வராஹ முர்த்தி சிலை இருப்பதையும் சென்ற பதிவில் பார்த்தோம்.
அப்படி இருக்க இன்று அந்த அருங்காட்சியகத்தில் இருந்து இப்படி ஒரு திடுக்கிடும் அறிக்கை


Subhash Kapoor Acquisitions Under Review

Subhash Kapoor, a second generation antiquities dealer and owner of Art of the Past Gallery on Madison Avenue in New York City, was arrested in Germany on Oct. 30, 2011 and extradited to India on July 14, 2012 to face charges of illegal exportation, criminal conspiracy and forgery. Art of the Past was in business for 35 years, selling Asian antiquities to a large roster of Museum clients, including the Toledo Museum of Art.

The Toledo Museum of Art, like many museums across the country, acquired objects from Mr. Kapoor in the period from 2001-2010. The most significant of the eight acquired by the Toledo Museum of Art from Mr. Kapoor is a Ganesha figure. After the 2006 Ganesha purchase, Mr. Kapoor gifted 56 small terracotta idols to the Museum. The purchased items have been on public display. The gifted items have never been on public display.

On July 18, 2013 the Museum received a copy of an Indian police report that includes photographs of 18 metal idols stolen from Sripuranthan Village in Tamil Nadu. One of the images of a Ganesha figure closely resembles the Ganesha purchased by the Museum in 2006 from Art of the Past. At the time of purchase consideration, the Museum received a provenance affidavit and the curator personally spoke to the listed previous owner. The object was also run through the Art Loss Registry with no issues detected.

On July 24, 2013 TMA Director Brian Kennedy sent a letter to the Consulate General of India in New York, Mr. Sugandh Rajaram, requesting his assistance in researching the Ganesha’s provenance with Indian officials. To date, the Museum has received no response. On February 17, 2014 a letter was sent to Dr. S. Jaishanka, Ambassador of India to the United States, soliciting his assistance. The Museum has not been contacted by Immigration and Customs Enforcement or any other U.S. or foreign government agency in regards to this object and others the Museum purchased from Art of the Past or gifted by Mr. Kapoor.”

அதாவது அவர்கள் சென்ற வருடம் ஜூலை மாதம் 24 ஆம் தேதி இந்த சிலை பற்றி அமெரிக்கில் உள்ள இந்தியாவின் கோன்சுலட் அலுவலகத்துக்கு கடிதம் எழுதி ஒரு பதிலும் கிடைக்க வில்லையாம்

மீண்டும் இந்திய தூதருக்கு சென்ற வாரம் கடிதம் எழுதி உள்ளனர். அதற்கும் பதில் வந்த அறிகுறியே இல்லை !!!

சந்தேகம் இல்லாமல் ஏற்கனவே தக்க ஆதாரங்கள் கொண்டு இது அதே சிலை தான் என்று நிருபித்து விட்டோம்.

விநாயகர் சிலை ஆலயத்தில் இருந்தபோது ( புதுவை பிரெஞ்சு இன்ஸ்டிட்யூட் உபயம் 1994 ஆம் ஆண்டு) எடுத்த படங்கள் நமது காவல் துறையிடம் 2009 முதல் உள்ளன !!! இன்னும் எத்தனை காலம் தாழ்த்துவார்கள் இவர்கள் ? இல்லை இந்த விநாயகரையும்சிவபுரம் சோமஸ்கந்தர் மாதிரி அனாதையாக அமெரிக்காவில் விட்டு விட எண்ணமோ ?


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

சிலைத் திருட்டு – பாகம் பன்னிரெண்டு – இவை பற்றிய மேலும் விவரம் கிடைக்குமோ ?

2012 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அமெரிக்க தனது அருங்காட்சியகங்களுக்கு ஒரு வேண்டுகோள் அல்லது எச்சரிக்கை விடுத்தது.

“Federal authorities are asking American museums to scrutinize their collections for items that they have obtained from a veteran Manhattan art dealer now accused of possessing antiquities stolen from India and other countries. “

அமெரிக்க அதிகாரிகள் அமெரிக்க அருங்காட்சியகங்களை தங்கள் இடத்தில இருக்கும் கலைப் பொருட்களை குறிப்பாக இந்தியா மற்றும் பல நாடுகளில் இருந்த சிலைகளை திருடி விற்றதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கும் ஆர்ட் ஆஃப் பாஸ்ட் இடத்தில இருந்து வாங்கிய பொருட்களை ஆராய்ந்து / சோதித்து பார்க்கும் படி எச்சரிக்கை விட்ப்பட்டது.

இன்று வரை இந்த எச்சரிக்கை மூலம் எந்த அருங்காட்சியகமும் தானாக வெளி வந்து எந்த உண்மையையும் வெளியிட்டதாக தெரிய வில்லை. மடியில் கனம் இல்லை என்றால் ஏன் தயங்க வேண்டும் ? இவை தான் நாங்கள் வாங்கிய பொருட்கள், அதற்கு அவர் கொடுத்ததாக பத்திரங்கள் இதோ – என்று சொல்ல ஏன் இவை தயங்குகின்றன?. மில்லியன் கணக்கில் பணம் செலவிட்டு வாங்கி அவற்றை திரும்ப தர நேர்ந்தால் என்ன என்ற அச்சமோ ? அப்படியே திரும்பத் தர நேர்ந்தாலும் ஏற்கனவே தூங்கிக் கொண்டிருக்கும் இந்தியா அரசாங்கம் அப்படியே விட்டுவிடும் என்ற நம்பிக்கையோ?

உதாரணம் : டோலேடோ அருங்காட்சியகம். நாம் ஏற்கனவே பார்த்த ஸ்ரீபுரந்தன் விநாயகர் செப்பு சிலை. இன்று வரை இந்த சிலை இவர்களுக்கு எப்படி கிடைத்தது, யாரிடத்தில் இருந்த வாங்கினார்கள் என்ற தகவல் வெளி வரவில்லை. திரும்பத் தரும் முயற்சிகள் எதுவும் எடுத்ததாகவும் செய்திகள் இல்லை.

இப்போது அவர்கள் இடத்தில மேலும் ஒரு சிலை – அதே ஆர்ட் ஆஃப் பாஸ்ட் இடத்தில வாங்கிய பால வராஹ முர்த்தி சிலை இதோ.


பொருளின் எண்ணைக் கொண்டு இது 2001 ஆம் ஆண்டு வாங்கப் பட்டது என்று தெரிகிறது. இதை ஆர்ட் ஆஃப் தி பாஸ்ட் என்னன்ன பத்திரங்களைக் காட்டி விற்றனர் என்று அருங்காட்சியகம் சொல்லுமா ? ( வழக்கம் போல தூதரக அதிகாரி டெல்லி கடையில் 1970 இல் வாங்கினேன் என்ற ஒரு பொய் பத்திரமாக இருக்குமோ? )

அடுத்து பர்மிங்க்ஹம் அருங்காட்சியகம் ஆர்ட் ஆஃப் தி பாஸ்ட் இடத்தில வாங்கியுள்ள சிவ லிங்கோத்பவ சிலை. 2008 ஆம் ஆண்டு வாங்கியுள்ளனர்.

ஆர்ட் ஆஃப் தி பாஸ்ட் பட்டியலில் உள்ள படமும் இதுவும் ஒரே சிலை சென்று தெரிகிறது.

இவர்களெல்லாம் ஏதோ சாதாரண சிறு ஆர்வலர் அல்லர் – இவை மிகப் பெரிய அருங்காட்சியகங்கள். இவற்றின் நோக்கம் சம கால மனிதனுக்கு அந்நாளைய கலை மற்றும் நாகரீகங்களை விளக்கி ஒரு பள்ளி போல அறிவை வளர்க்கும் இடங்கள். இவை தங்கள் இந்த உயரிய நோக்கத்தை கொச்சைப் படுத்தும் விதத்தில் திருட்டுப் பொருட்களை காட்சியில் இன்னனும் வைத்திருப்பது சரியா?

தெரியாமல் திருட்டுப் பொருளை வாங்கி இருந்தாலும் உண்மை தெரிந்த பிறகும் மறைக்க முயற்சிப்பது தவறுக்கு மேல் தவறு செய்வது தானே.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

சிலைத் திருட்டு – பாகம் பதினொன்று – இன்னும் ஏன் இந்த பொறுமை ?

இந்தப் பதிவில் இந்த திருட்டை பற்றிய இன்னும் பல திடுக்கிடும் தகவல்களும் அதனை ஒட்டி இன்னும் நமது அரசாங்கம் ஏன் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறது என்ற கேள்வியையும் வாசகர்களுக்கு வைக்கிறோம். ” களவு போன நமது பொக்கிஷங்களுக்கு விமோசனமே கிடையாதா ?” என்ற கேள்வி தான் மீண்டும் மீண்டும் மனதில் எழுகிறது.

இணையம் ஒரு அபார கருவி – அதனை நல்ல முறையில் பயன்படுத்தி இந்த மாதிரி கொள்ளைகளை வெளிப்படுதலாம் என்ற எங்கள் எண்ணத்தை பிரதிபலிக்கும் இன்னும் ஒரு நண்பரின் இனைய தளம் டு முதலில் மகிழ்ச்சி கொண்டேன்.

சிலை திருட்டை பற்றி படித்துவிட்டு மனம் கொந்தளித்து விட்டு அடுத்த அரை நொடியில் காபி குடிக்க எழுந்து சொல்லும் பலரை போல இல்லமால் ஏதாவது செய்ய வேண்டும் என்று செய்து காட்டும் நண்பர் இவருக்கு ஒரு பெரிய சல்யூட்.

அப்படி அவர் போட்ட பதிவுகளை கண்டபோது ஒரு பதிவில் இருக்கும் படம் எங்கோ பார்த்த மாதிரி இருந்தது.

“On 8 February and 1 March 2013 E-mails were sent out about four sculptures stolen from the centrally protected site of Kari Talai in Katni district of Madhya Pradesh.

These four are among the nine sculptures that were stolen from the Vishnu Varaha temple on 16/17 August 2006. Out of these nine, INTERPOL issued an alert about the torso of a Vishnu, resulting in its interception by the US Homeland Security Investigations; the others remain untraced and may have appeared in the art market.

In this present E-mail, two more sculptures are being reported, a Shalabhanjika and a female figure. The Shalabhanjika (No. KTI 99) is a young woman standing under a tree; and the female figure (No. KTI 258) alluringly removes a thorn from her foot or paints the sole of the foot, supported by a dwarfish woman. Both are universal motifs in Indian art since ancient period.

Kari Talai was an important centre under the Haihayas or Kalachuris of Tripuri or the Jabalpur area, where places of worship of Shaivism, Vaishnavism, Jainism and Buddhism were built. The temple of Vishnu’s Boar incarnation here is a large complex of the eleventh century, under the protection of the Archaeological Survey of India.

Photographs attached to this mail are supplied by the ASI’s Bhopal Circle.

First information Report was lodged at the Vijayraghavgarh police station, No. 157/06 of 17 August 2006.

From E-mails sent out earlier regarding Bilhari in the same area it is clear that vandals are striking in this region frequently.

Kari Talai is a centrally protected site. ASI has records of all these sculptures. One who perpetrated or sponsored this crime should know that he cannot fabricate a false provenance for the pieces whose pictures are now going into wide circulation.

If any museum, private collector or dealer has acquired these sculptures, they are exhorted to give up possession, inform INTERPOL, their local police, India’s diplomatic missions or the ASI. If anyone, within India or outside, has received these pieces even in ignorance of the clandestine nature of their removal, he knows now that they are stolen antiquities, and they may have been smuggled out in violation of the Indian laws and international conventions.
The addresses of the ASI are on their website www.asi.nic.in.

In the past, stolen and smuggled antiquities were traced with the support of conscientious individuals like you, or by the security agencies. If you co-operate, these remaining eight sculptures can also be traced, as was done in the case of the Vishnu torso, and be repatriated. One way in which you can support this effort is to save this mail, and others that you will receive, in a dedicated folder and forward them to your contacts. Some scholars are already doing this.

Thanking you, and hoping your support will continue,

K. Mankodi”

ஆம் – அந்த படத்தை ஆர்ட் ஆஃப் ஃபாஸ்ட் பட்டியலில் கண்டு பிடித்தேன்.

இவை ஒரே சிலை தான். இதை கொண்டு இந்த திருட்டு கும்பல் தமிழ் நாட்டில் மட்டும் அல்ல இந்தியா முழுக்க அதுவும் தொல்லியல் துறை பாதுகாப்பில் இருந்த ஒரு இடத்தில இருந்தே சிலைகளை கடத்தி உள்ளனர் என்று நிரூபணம் ஆகிறது.


இந்த சிலை தற்போது அமெரிக்காவில் ஆர்ட் ஆஃப் தி ஃபாஸ்ட் சொந்தமான இடத்தை அமெரிக்க காவல்துறை சோதனை இட்டபோது சிக்கி உள்ளது என்று தெரியவந்துள்ளது. எனினும் இந்திய பக்கம் இருந்து இவற்றை மீட்டு வர எந்த முயற்சிகளும் எடுக்கப் படவில்லை என்று தெரிகிறது.

இன்னும் எதற்காக நமது அரசாங்கம் காத்துக்கொண்டு இருக்கிறது என்று தெரியவில்லை. இந்த சிலை திருட்டு பற்றி மேலும் செய்திகள் வெளியே வர இவர்கள் இடத்தில சிலைகளை வாங்கிய பலரும் அவற்றை விற்று விட முயற்சிகள் மேற்கொள்ள போகிறார்கள். இது ஆர்ட் ஃஆப் தி ஃபாஸ்ட் பட்டியலில் இருந்த ஒரு சிலை இப்போது க்றிஸ்டீஸ் . என்ற இணைய தலத்தில் ஏலம் விடப்பட உள்ளது.

க்றிஸ்டீஸ் . என்ற இணைய தலத்தில் ஏலம் விடப்பட உள்ளது.


சிலை பற்றி குறிப்பு ..

“Pre-Lot Text

PROPERTY FROM A PRIVATE NEW YORK COLLECTION
Provenance

Acquired in New York, 1998 ”

இது போன்று இன்னும் எத்தனை சிலை கை மாறப் போகின்றனவோ ? இவற்றை எல்லாம் மூலை முடுக்கில் சென்று தேடிப் பிடிக்க முடியுமா? உடனடியாக அரசாங்கம் நடவடிக்கைகளை முடுக்கி விட வேண்டும்.

அடுத்த பதிவில் இன்னும் பல அருங்காட்சியகங்களில் ஆர்ட் ஒப் தி பாஸ்ட் சிற்பங்கள் இன்னமும் காட்சியில் இருப்பதை பார்ப்போம்.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment