சிவபுரம் – ​​சொல்லப்படாத கதை, பாகம் 3

பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் – அப்படி பல வருடங்களுக்குப்பின் சிவபுரம் சிலைகளை திருடிய ஸ்தபதி செய்த நகலே நமக்கு ஒரு முக்கிய துப்பு தந்துள்ளது.

இந்த சிவபுரம் சிலை திருட்டு பற்றிய முதல் பாகத்திலும் மற்றும் இரண்டாம் பாகத்திலும் களவு போன ஆறு சிலைகளில் இரண்டு சிலைகளுக்கும் அமெரிக்காவில் உள்ள நோர்டன் சைமன் அருங்காட்சியகத்துக்கும் உள்ள தொடர்பை நிரூபித்தோம். நடராஜர் பெரும் போராட்டத்திற்குப் பிறகு தமிழகம் திரும்பினார் எனபது மட்டுமே அனைவருக்கும் தெரியும். இன்றும் மற்ற ஐந்து சிலைகள் காணவில்லை என்று தான் காவல் துறை தஸ்தாவேஜுகள் சொல்கின்றன. சென்ற இரு பதிவுகள் மூலம் சிவபுரம் சோமஸ்கந்தர் திருமேனி இன்றும் அமெரிக்காவில் உள்ளது என்பதை முக்கிய குறிப்புகளுடன் நிரூபணம் செய்தோம்.

மற்ற நான்கு சிலைகள் என்னவாயின ? தொலைத்த இடத்தில தானே தேட வேண்டும் – காவல் துறை பதிவு செய்த குற்றப் பத்திரிகையின் படி சோமஸ்கந்தர் உடன் இன்னும்“Thirugnanasambandar, Pillaiar and two Amman” கண்டுபிடிக்க முடியவில்லை.

மேலும் இந்த சிலைகள் 1954 – 1956 இடைப்பட்ட தருவாயில் திருடப்பட்டன. ஸ்தபதி உதவியுடன் நகலை கோயிலுக்கு கொடுத்துவிட்டார்கள். . “The trustees of the temple wanted to repair the idols and this work was entrusted to Ramasamy Sthapathy of Kumbakonam in the year June 1954. In the year 1956 Thilakar of Kuttalam and his brother Doss induced Ramasamy Sthapathy to part with the original Natarajar and 5 other idols and to substitute the same with fake idols. “

துரதிஷ்ட வசமாக திரு ஸ்ரீனிவாசன் அவர்களது நூலில் நடராஜர் / சோமஸ்கந்தர் படங்களை போல ஒரிஜினல் அம்மன் சிலைகளின் படங்கள் இல்லை. இவை இல்லாத பட்சத்தில் எதை கொண்டு தேட முடியும் ?

அதற்க்கு விடை – பாண்டி பிரெஞ்சு இன்ஸ்டிடுட் 15th June 1956 மற்றும் 16th Nov 1957 எடுத்த படங்கள். சென்ற பதிவில் திருட்டு ஸ்தபதி ஒரிஜினல் போலவே சோமஸ்கந்தர் சிலை மற்றும் நடராஜர் சிலைகளை செய்தான் என்பது தெரிய வந்தது.

அதே போல பிரெஞ்சு இன்ஸ்டிடுட் எடுத்த மற்ற சிலைகளின் படங்களை தேடிய பொது இந்த தனி அம்மன் சிலை கிடைத்தது.

நோர்டன் சைமன் அருங்காட்சியக பிற சிலைகளுடன் ஒப்பிட்டு பார்த்த பொது இந்த சிலை கிடைத்தது

Parvati, c. 1000
India: Tamil Nadu, 975-1025
Bronze
32-1/2 in. (82.6 cm)
The Norton Simon Foundation
F.1972.10.S
© 2012 The Norton Simon Foundation

இதில் நாம் கவனிக்க வேண்டிய ஒன்று – இந்த சிலையை அவர்கள் சேர்த்த ஆண்டு – 1972, அதே ஆண்டில் தான் சிவபுரம் நடராஜர் மற்றும் சோமஸ்கந்தர் சிலைகளும் சேர்க்கப்பட்டன.

இரு சிலைகளையும் ஒன்றாக வைத்து பார்க்கும்போது கண்டிப்பாக ஒன்றை ஒத்தே மற்றொன்று செய்யப் பட்டுள்ளது என்று தெரிகிறது.

எதோ ஒரு அலட்சியத்தாலோ என்னவோ – நடராஜர் வடிவத்தை நகல் செய்த பொது காட்டிய ஆர்வத்தை சோமஸ்கந்தர் மற்றும் அம்மன் சிலைகளை செய்த பொது ஸ்தபதி காட்ட வில்லை என்று தோன்றுகிறது. பல இடங்களில் வித்தியாசம் தெளிவாகவே தெரிகிறது – எனினும் இரு சிலைகளையும் ஒன்று சேர வைத்து பார்த்தால் தானே குட்டு வெளிப்படும் என்று அவன் நினைத்திருக்கலாம். மேலும் செப்பு சிலை வார்ப்பது என்பது எவ்வளவு கடினம் – ஆயிரம் ஆண்டு சோழர் கலை செல்வத்தை நகல் எடுப்பது கடினம் தானே.


சோமாஸ்கந்தர் சிலை போல இந்த அம்மன் சிலைக்கு நம்மிடத்தில் நேரடி ஆவன படங்கள் இல்லை என்றாலும் நடராஜர் மற்றும் சோமஸ்கந்தர் சிலைகள் திருடிய முறை, சென்றடைந்த இடம் என்று அனைத்தையும் வைத்து பார்த்தால் – கண்டிப்பாக இந்திய அரசு இந்த வழக்கை மீண்டும் திறக்க வேண்டும். யாருக்கு தெரியுமோ இல்லையோ திருட்டு பொருளை வாங்கி இன்றும் காட்சிக்கு வைத்திருக்கும் அந்த அருங்காட்சியகத்தின் அதிகாரிகளுக்கு உண்மை தெரியும் !!


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

சிவபுரம் ​சோமாஸ்கந்தர் – ​சொல்லப்படாத கதை, பாகம் 2

மனித வாழ்வில் ஒரு விஷயம் 70 ஆண்டுகள் கால தாமதம் ஆவது என்பது பெரிய குற்றம், அதுதே சமயத்தில் ஆயிரம் ஆண்டுகள் புகழ்பெற்று நின்ற ஒரு சிலை களவு போனதை பற்றிய தகவல் என்றால் இந்த 70 ஆண்டுகள் சொற்ப காலம் தான். முன்னர் நாம் பார்த்த சிவபுரம் சிலை திருட்டின் தொடர்ச்சி இந்தப் பதிவு. – ஒரு திடுக்கிடும் தகவல் – சிவபுரம் நடராஜர் சிலை திருடு போய்விட்டது – அதற்கு பதில் ஆலயத்தில் இருப்பது ஒரு நகல் என்று நமக்கு சொன்னது ஒரு பிரிட்டிஷ் காரர் – கலை உலகையே அவரது இந்த செயல் உலுக்கியது.

அவர் கொடுத்த குறிப்பு தான் சிவபுரம் நடராஜர் சிலை தாயகம் திரும்ப காரணம் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் 1965 ஆம் ஆண்டு Early Cola Bronzes என்ற நூலில் சிவபுரம் நடராஜர் சிலை திருட்டை பற்றிய தகவலை வெளியிட்டார்.

ஆனால் இப்போது முதல் முறையாக – அவரே எழுதிய இன்னும் ஒரு குறிப்பு – இந்த சிலை திருட்டு நடராஜர் சிலையுடன் முடியவில்லை – அதன் கூடவே களவு போன சோமஸ்கந்தர் சிலையும் அதே அருங்காட்சியகத்தில் இருக்கின்றது என்று அவரே ஒப்புக்கொள்ளும் சாசனம் இதோ !!

Marg Vol 48. No.4 June 1997 – EARLY CHOLA BRONZES IN THE NORTON SIMON MUSEUM – Douglas Barrett.

It is interesting to read the General Editor’s Note: “ The late Douglas Barrett wrote this article for the late Norton Simon soon after his visit to the museum in Pasadena, California, in 1978. However, the article was never published. Marg is pleased to publish it now through the generosity of the Norton Simon Museum and Mrs. Mary Barrett. Mr. Barrett was an authority on Cola Bronzes and we feel that his comments on the selected masterpieces will be much appreciated by Indian Art historians. One of the Bronzes ( figure 9) is no longer in the collection and now belongs to a European Collector. Some faithful readers of Marg may recognize a few of the others as they were published in the fifties in the magazines. “

1978 நோர்டன் சைமன் சென்று சிலைகளை பார்த்து அவர் எழுதிய குறிப்பு – யார் கண்ணிலும் இருபது ஆண்டுகள் படாமல் – பின்னர் மார்க் பத்திரிகையில் வெளியாகிறது

முழு குறிப்பைக் கீழே காணலாம் – நமக்கு வேண்டியது 85 ஆம் பக்கம் – அவர் கூறுவது “ Hence, the importance of the remarkable Somaskanda in the Museum ( figures 3 and 4). The Somaskanda, together with a standing Ganesa and the famous Nataraja , formed part of a hoard discovered at Sivapuram ( Tanjavur district). It was published in its uncleaned state by P. R. Srinivasan and with the Ganesa and Nataraja, dated to the middle of tenth century AD.”

மேலும் இந்த திருட்டில் இதுவரை வெளிவராத ஒரு கோணம். பாண்டி பிரெஞ்சு இன்ஸ்டிடுட் சிவபுரம் ஆலயத்தில் உள்ள சிலைகளை 15th June 1956 மற்றும் 16th Nov 1957 படம் பிடித்துள்ளனர். அவர்களுக்கு அப்போது சிலைகள் களவு போய்விட்டன என்பதும் அவர்கள் படம் பிடிப்பது ஸ்தபதி செய்த நகல் என்று தெரியாது. இது வரை யாருமே பார்க்காத அந்த படங்கள் இதோ – இந்த படங்கள் இந்த சிலை கடத்தல் வழக்கில் முக்கிய சாட்சியங்கள் ஆகப்போகின்றன.

டௌக்லஸ் பர்ரெட் 1965 இல் சிவபுரம் சென்றபோது இவற்றை தான் பார்த்திருக்க வேண்டும்.


ஸ்தபதி 1954 ஜூன் மாதத்திலேயே தன கைவரிசையை காட்டிவிட்டார் !! எனவே ஒரு பார்வையிலேயே டௌக்லஸ் பர்ரெட் தன் இடத்தில இருந்த திரு . P.R. ஸ்ரீனிவாசன் அவர்களது நூலில் உள்ள படங்களுடன் ஒப்பிட்டு இவை நகல் என்று சொல்லிவிட்டார்.


திருட்டு ஸ்தபதி நடராஜர் சிலையை ஒரிஜினல் சிலை போல வடிக்க மிகவும் முயற்சி செய்துள்ளான். எனினும் சோமஸ்கந்தர் மிகவும் மோசமான நகல். நடராஜர் மேல் தான் அனைவர் கவனமும் இருக்கும் என்ற நம்பிக்கையோ என்னமா.

சோமஸ்கந்தர் சிலைகளை பார்த்தவுடனே வித்தியாசம் தெரிகிறது.


எனினும் நகல் பார்ப்பதற்க்கு ஒரிஜினல் போல இருக்க அவன் எடுத்த முயற்சி தான் நமக்கு மேலும் இந்த வழக்கில் உதவி செய்ய போகிறது……. அதை அடுத்த பதிவில் தொடருவோம்…

இதுவரை நாம் பார்த்தவற்றை கொண்டு ஒன்று தெளிவாக தெரிகிறது – இந்திய அரசு நோர்டன் சைமன் அருங்காட்சியகத்துடன் 1976 இல் நடராஜர் சிலை பற்றி ஒப்பந்தம் செய்துகொண்டது. அதன் படி பத்து ஆண்டுகள் அமெரிக்காவில் அந்த சிலை இருந்து விட்டு மீண்டும் இந்தியாவுக்கும் திரும்பி விட்டது. ஆனால் கூடவே களவு போன இந்த சிலை இன்னமும் அங்கேயே சிக்கி உள்ளது. நமது காவல் துறை இந்த வழக்கை இவ்வாறு முற்றுப்புள்ளி வைத்து முடித்துள்ளது “All accused arrested and convicted. There is no information about the remaining idols “. இப்போது இந்த தகவல் கண்டிப்பாக அந்த அருங்காட்சியகத்தில் 1978 முதல் இருந்திருக்க வேண்டும். தெரிந்தே திருட்டு பொருளை ….

முழு மார்க் குறிப்பு :










Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

சிலைத் திருட்டு – பாகம் பதினைந்து – 1916 புத்தகம் கொடுக்குத துப்பு ..

தமிழக கோயில்களில் உள்ள சிலைகளை முறைப்படி படம் எடுத்து வைப்பதன் முக்கியத்துவத்தை நிரூபிக்க இதனை விட ஒரு பெரிய உதாரணம் தேவை இல்லை.

1916 ஆண்டு வெளிவந்த நூல் என்றவுடன் ஏனோ தானோ என்று தான் இருக்கும் என்று எண்ணி வேக வேகமாகப் பக்கங்களை புரட்டினேன் – செப்புத் திருமேனிகள் படம் கண்ணில் பட்டது. எங்கேயோ பார்த்த நினைவு.

South-indian images of gods and goddesses (1916)

இலவசமாக தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.

பக்கம் 109 (129 in the pdf) உள்ள படம் தான் எனது ஆர்வத்தை தூண்டியது.

சோமஸ்கந்தர் சிலை – உலோகம் – சிவன்கூடல் என்ற குறிப்பு மட்டுமே இருக்கிறது.

பொதுவாக சோமஸ்கந்தர் வடிவம் ஒரே பீடத்தில் அமர்ந்திருப்பது போலவே இருக்கும் – இந்த சிலையில் வெவ்வேறாக வார்த்து இருப்பது கவனிக்கத்தக்க அரிய விஷயம். இப்படி உலோகத்தில் செய்வது கடினம் – இரண்டு பீடங்களை ஒரே அளவில் வார்க்க வேண்டும் – அதில் உள்ள கோடுகள் உட்பட அனைத்தும் ஒரே சீராக இருக்கவேண்டும்.

இதுவே நமக்கு தரும் முக்கிய துப்பு/குறிப்பு. தற்போது சிங்கை அருங்காட்சியகத்தில் இருக்கும் சிலை மட்டுமே இது போல இருக்கிறது. இந்த சிலையை அருங்காட்சியகம் 2000 ஆம் ஆண்டு வாங்கியது. யாரிடம் இருந்து வாங்கினார்கள் என்ற விவரங்கள் இல்லை.

இரு சிலைகளையும் ஒப்பிட்டு பார்ப்போமா?









இரண்டு சிலைகளும் ஒன்றே என்பது தெளிவாக தெரிகிறது. அக்கம் பக்கம் கேட்டு பார்த்தால் இந்தக் கோயிலில் இப்போது ஒரு சிலை கூட இல்லை. இந்தக் கோயில் பற்றி வேறு எந்த நூலிலும் தகவல்கள் இல்லை. இந்த நூலிலும் வேறு எந்த சிலை படமும் இல்லை.

இவற்றைக் கொண்டு அதிகாரிகள் மேலே துப்பு துலக்கினால் பல உண்மைகள் வெளி வரும்!! இந்த திருட்டு உறுதி செய்யப்பட்டால் இந்த சிலை திருட்டு கும்பல் 2000 ஆண்டுக்கு முன்னரே இந்த செயல்களை செய்தார்கள் என்பதும், இன்னும் பல கோயில் சிலைகளை திருடி விற்ற செயல்கள் அம்பலம் ஆகும்.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

சிலைத் திருட்டு – பாகம் எட்டு .அவன் ஆஸ்திரேலியாவில் ஆட அவள் அமெரிக்காவில் !

இந்த சிலை திருட்டு பற்றி முதல் முதலில் தகவல் வெளியாகி பல காலம் ஆகி விட்டது. நண்பர்கள் பலர் உதவிகளுடன் பல துப்புகள் வெளி வந்துள்ளன. இதுவரை நமது அதிகாரிகள் சிலைகளை மீட்டு வர என்ன முயற்சிகள் எடுத்துள்ளனர் என்று தெரியவில்லை, எனினும் இன்னும் துரிதமாக ( இப்போதாவது) செயல்படலாமே என்ற ஆதங்கம் வருகிறது. எனினும் நம் பணி தொடர்கிறது. இன்று ஆஸ்திரேலியாவில் சிக்கி இருக்கும் ஆடல் அரசனின் துணை – சிவகாமசுந்தரி அமெரிக்காவில் இருப்பதை நிரூபணம் செய்கிறோம்.

முதலில் அம்மை அப்பன் ஸ்ரிபுரதன் சிவல் கோயிலில் இருந்தபோது உள்ள படம்.


இதற்கு முன்னர் ஆஸ்திரேலியாவில் இருக்கும் நடராஜர் வடிவம் என்பதை தெளிவு பெற விளக்கினோம். இப்போது சிவகாமசுந்தரி பற்றி, நமது நேயர் ஒருவரின் உதவியுடன், புதிய ஆவணங்கள் கொண்டு நிரூபிக்கிறோம். ஆர்ட் ஆஃப் தி பாஸ்ட் பட்டியல் 2008 – முத்து முத்தான வரிகளை கொண்ட வர்ணனையுடன் அழகிய படங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த முகத்தை பார்த்தவுடனே எண்ணெய் கசிந்த குறிகள் தெரிகின்றன – திருமேனியாக பல நூறு ஆண்டுக்காலம் அபிஷேகத்தால் வழிபட்ட சிலை என்பதற்கு ஆதாரமாய் !

இரண்டு படங்களை ஒட்டி பார்த்தால் உடனே தெரிகிறது இரண்டும் ஒரே சிலை என்று.

நல்ல காலம் இதை யாரும் இன்னும் வாங்க வில்லை. அமெரிக்க போலிஸார் ஆர்ட் ஆஃப் தி பாஸ்ட் சம்பந்தப்பட்ட ஒரு சேமிப்பு கிடங்கை சோதனை இட்டு பறிமுதல் செய்த பொது சிக்கியது. அதை இந்த படத்தில் பார்க்கலாம்.

இந்த ஆதாரங்களை கொண்டு நமது காவல் துறை துரிதமாக செயல் பட்டு அழகான இந்தத் தெய்வச்சிலைகளை மீட்டு வரவேண்டும் – மேலே அமெரிக்காவில் இருக்கும் அம்மையிடமிருந்து பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் கீழே ஆஸ்திரேலியாவில் இருக்கும் அப்பன், இருவரும் மீண்டும் வீடு திரும்பி இணைய வேண்டும்.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

யார் இந்த இரு பொடி கணங்கள் ?

என்னை போன்றவர்களுக்கு இணையம் ஒரு வரப்பிரசாதம் ! ஒரு பெரியவர் நாற்காலி ஆராய்ச்சியாளர் என்று பட்டம் கூட சூட்டினார் ! அப்படி ஒரு ஆராய்ச்சி தான் இது.

புகழ் பெற்ற ராஜ சிம்ஹ பல்லவரது கைலாசநாதர் சிதைந்த ஓவியங்களுக்கு உயிர் கொடுக்க எடுத்த முயற்சியின் பொது பல கடினமான இடங்களை சந்தித்தோம்.

குறிப்பாக மிகவும் சிதைந்த அடி பாகத்தில் இருந்த இரு உருவங்களை அடையாளம் கண்டுகொள்ள பல படங்களை ஆராய்ந்தோம்.

முடிந்தவரை இவை அந்நாளில் எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை செய்து அதன்படி படங்களை வடித்தோம். எனினும் இந்த இரு குள்ள கணங்கள் அங்கே இருப்பதே ஒரு ஆச்சரியமாக இருந்தது.

அந்த பெண் வடிவ குள்ள கணம் – உமையவளின் தோழியா ? இலக்கணத்தில் இவர்களை பற்றி ஏதாவது குறிப்பு உள்ளதா? இப்படி எல்லாம் அப்போது தோணவே இல்லை.

பல காலம் கழிந்து நண்பர் அரவிந்த் அவர்கள் தான் லால்குடி சென்ற பொது எடுத்த படங்களை சுட்டியை அனுப்பி வைத்தார்.

அங்கே உள்ள கதை சொல்லும் புடிப்புச் சிற்ப்பங்களை ஆராய்வதே எங்கள் நோக்கம் என்றாலும் அதில் இன்னொரு வடிவம் கவனத்தை ஈர்த்தது.
எதையோ நினைவூட்டியது.

இங்கேயும் அரியணையில் அம்மையப்பன் வடிவம் என்றாலும் முருகன் இல்லை. வலது புறம் அடியவர் ஒருவரும் – மேலே இருபுறமும் இரு முகங்கள் தெரிகின்றன. அவற்றில் நான்முகன், பெருமாள் வடிவங்கள் உள்ளனவா என்பது சரியாகத் தெரியவில்லை. நம் கவனத்தை ஈர்த்தப் பகுதி அரியணைக்கு அடியில் இருக்கும் இரு கணங்கள் தான்….

இந்த சிலையின் காலத்தை சரியாக கணிப்பது கடினம் என்றாலும் சுவாரசியம் என்னவெனில் பல்லவ ஓவியன் தீட்டிய அதே பாணியில் அந்த இரு குள்ள கணங்களும் இங்கே இருப்பது தான்!! இவர்கள் யாராக இருக்கக்கூடும் ?


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

தந்தையும் மகனும் சிற்பிகளாக இருப்பது பெரும் பிரச்சனையாக இருந்திருக்கும் போல – திருமலைப்புரம்

அந்த காலத்தில் தந்தையும் மகனும் சிற்பிகளாய் இருப்பது பலருக்கு கண்ணுறுத்தலாக இருந்திருக்கும் போல ! தந்தை செய்த சிற்பத்தில் மகன் குறை கண்டுபிடிப்பதும் அதனால் தந்தை தன கையை தானே வெட்டி எறிவது போல பல ( கட்டுக்) கதைகள் எதோ ஒரு ஒற்றில் கேட்டால் பரவாயில்லை – ஊருக்கு ஊர் இதே கதையை அந்த ஊரில் உடந்தை சிற்ப்பத்துடன் ( உள்ளே தேரை இருந்தது தான் அந்த குறையாம் !) இந்த கதையை சொல்லி சொல்லி பரப்பி விடுகிறார்கள். ஆனால் நல்ல வேலையாக இந்த முறை புதிதாக ஒரு கதையை கேட்டோம் !

தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருந்தாலும் வழி கேட்டுக்கொண்டு – அதற்க்கு ஊர்காரர்களுக்கு வழி தெரியவேண்டுமே ! தட்டி தடவி, திருமலாபுரம் என்று இன்று அழைக்கப்படும் திருமலைப்புரம் ( திருநெல்வேலி – கல்லிடைக்குறிச்சி அருகில் சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது) சென்றடையும் போதே பொழுது சாய்ந்துக் கொண்டு இருந்தது.

பெரிய குன்றில் ஒரு புறம் உள்ள பாறை முகத்தில் வெட்டிய குடவரை பளிச்சென்று தெரிகிறது. அதன் முன்னே அந்த சிற்பி / மன்னன் நின்று பார்க்கும் பொது தங்கள் மனக்கண்ணில் அவர்கள் கைவண்ணம் ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னரும் நிலைத்து நிற்கும் என்று எண்ணி இருப்பார்களா ?

சின்ன குடவரை தான். இரு தூண்கள் – இரு அரை தூண்கள் ( வட திசை நோக்கி ஒரு முடிவுற்ற குடவரை உள்ள்ளது – தெற்கு நோக்கி ஒன்று முடிவு பெறாத நிலையிலும் உள்ளது. அந்த முடிவு பெறாத குடைவரையை வைத்து தான் இந்த கதை வளர்கிறது – அதை பின்னர் பார்ப்போம் )

முதல்லில் வடக்கு குடைவரையை இன்னும் அருகில் சென்று பார்ப்போம். தூண்களில் அழகிய வேலைப்பாடுகள் உள்ளன.

அருமையான குடவரையில் நடு நாயகமாக தாய்ப்பாறையில்f செதுக்கிய நந்தி இருந்திருக்க வேண்டும். பாவம், அதன் கால்கள் மட்டுமே நமக்கு எஞ்சி உள்ளன. எவ்வளவு கடினமான வேலைப்படாக அது இருந்திருக்கவேண்டும் ! அடுத்த குடைவரையை பார்க்கும் பொது இது பற்றி நமக்கு மேலும் புரியும்.

இந்த குடைவரையின் காலம் சுமார் ஏழாம் நூற்றாண்டின் பின்பகுதிக்கு கணக்கிடப் படுகிறது. இது பாண்டியர் பாணியில் உள்ளது. கருவறையில் உள்ள சிவலிங்கம் தாய்பாரையில் செதுக்கப்பட்டிருப்பது, விநாயகர் சிற்பம் இருப்பது மற்றும் உள்ளே இருக்கும் மற்ற சிற்ப்பங்களின் பாணியை கொண்டும் இவற்றை நாம் அறியலாம்.

இரு வாயிற் காவலர்களில் இடது புறம் இருப்பவர் முறுக்கிய மீசையுடன் கம்பீரமாக தோற்றம் அளிக்கிறார்.




உட்சுவர்களில் நான்முகன் , பெருமாள் மற்றும் சிவபெருமானின் அருமையான ஆடல் சிற்பம் உள்ளது.


ஆடல் சிற்பம் என்றால் புகழ் பெற்ற நடராஜர் வடிவம் அல்ல – ஆனால் சதுர கோணத்தில், கையில் நடன நூலை பிடித்து அவர் ஆடும் அழகு மிக அருமை. அவருக்கு இருபுறமும் பூத கணங்கள் உள்ளது – வலது புறம் உள்ள கணம் சிதைந்து விட்டது – இடது புறம் இருப்பவர் சங்கீதம் சார்ந்த ஆராய்ச்சியாளர்களுக்கு மிகவும் முக்கியமானவர். இந்த ஆடல் காட்சி மற்றும் பூதகணத்தை, அடுத்த பகுதியில் பார்ப்போம்.

இங்கே குறிப்பிட வேண்டியது இந்த சிற்பங்களின் அளவு – மேல் பாகம், முகம் – அணிகலன் எல்லாம் அழகாக இருந்தாலும் – இடுப்பு மற்றும் கால்கள் சற்றே அளவில் குறைவாக இருப்பது சற்று அழகு குறைவாக காட்சி அளிக்கின்றன.

சுவர்களில் ஒரு சில இடங்களில் ஓவியங்கள் இருந்த தடயங்கள் தெரிகின்றன. இந்த குடைவரைகள் முழுவதும் அந்த நாளில் ஓவியங்களால் அலங்கரிக்கப் பட்டிருந்திருக்கும் !! இன்னும் ஒரு புதமை இங்கே மும்மூர்த்திகளின் வடிவங்களின் நடுவில் இடத்தை பிரிக்க தூண்களை போலவே கல்லில் செதுக்கி இருப்பது.


பொழுது சாயும் நேரம் ஆகா, விடு விடு என்று அடுத்த குடைவரையை காண சென்றோம். அதற்குள் பெரிய கூட்டம் சேர்ந்துவிட்டது. எதோ பாரதிராஜா போல நாங்களும் படம் எடுக்கு வந்திருக்கிறோம் என்று நினைத்தார்களோ என்னமோ ! அந்த குடவரையில் பார்ப்பதுக்கு ஒன்றுமே இல்லை. அதை பூட்டி வைத்துள்ளனர் – சாவி இங்கே இல்லை, என்றெல்லாம் சொன்னார்கள்.



வெளியில் உள்ள அரைகுறை சிற்பத்தை ( விநாயகரா??) பார்க்கும் பொது அவர்கள் சொல்வதில் தப்பு இல்லை என்று தான் தோன்றியது. நாங்கள் அந்த பூட்டிய கதவின் கம்பிகளுக்குள் தலையை திருப்பி திருப்பி உள்ளே பார்க்க முயற்சி செய்த எங்களை பார்த்து அவர்களுக்கு கருணை பிறக்கு – தொல்லியல் துறை தொலைபேசி என்னை தந்தார்கள். உடனே போன் செய்து வழக்கம் போல ” எனக்கு ஆசி இல் @#@#@#@#@# சாரை தெரியும் ” என்று ஒரு இரு பிரமுகர்களின் பெயரை சொல்லியவுடன் அவர் ” இதோ வருகிறேன் என்றார் !”

அப்படி அவர் வருவதற்கு காற்று நிற்கும் பொது தான் அந்த ஆடு மேய்ப்பவர்கள் அந்த ” கதையை” சொன்னார்கள். முதல் குடைவரையை செதுக்கிய சிறப்பிக்கு மிகவும் சுட்டியான மகன் ஒருவன் இருந்தானாம். அவன் தன தந்தைக்கு தினமும் வீட்டிலிருந்து ” காபி ” எடுத்து வருவானாம். அவனுக்கு தந்தையின் கலையை கற்க பெரும் ஆசை. அதன்படி அவன் அப்பாவுக்கு காபி வைத்துவிட்டு அவர் செதுக்குவதை பார்த்து மனதில் பதிந்து – மலையின் அடுத்த பக்கம் சென்று அதே போல செதுக்க துவங்கினானாம். தந்தைக்கு இது தெரியாமல் இருக்க தந்தை சுத்தியால் உலையை அடிக்கும் அதே தருணத்தில் தானும் அடிப்பானாம். அப்படியே பல காலம் செல்ல – ஒரு நாள் தந்தை திடீரேனே செதுக்குவதை நிறுத்த – மகனின் உளியின் ஓசை அவருக்கு கேட்டு விட்டது. என்ன கடக்கிறது என்று பாக்க சத்தம் வந்த இடத்தை நோக்கி அவர் செல்ல – அங்கே தனது வேலையை யாரோ காப்பி அடிப்பதை கண்டு கோபம் கொண்டார். கோபம் கண்ணை மறைக்க கல்லின் மேலே குடிந்து வேலை செய்வது தன மகன் என்று தெரியாமல் சுத்தியல் கொண்டு அடித்து கொன்றுவிட்டாராம் !!

அப்போது சாவி வந்துவிட்டது, உள்ளே சென்று நிறை பெறாத அந்த குடவரையில் ” ஒன்றுமே இல்லாத ” சுவர்களில் அந்த காலத்தில் எப்படி இந்த கல்லை குடைந்தார்கள் என்று அறிய உதவுகிறது. குறிப்பாக அந்த தாய்பாரை நந்தி …இங்கே அதற்க்கு நடுவில் எப்படி கல்லை விட்டு சுற்றி குடைந்து வருவது தெரிகிறது.

குடவரையில் எப்படி கல்லை குடைந்து இன்னும் ஆழம் செல்கிறார்கள் என்றும் அறியலாம். ஒன்று நாம் கவனிக்க வேண்டும் – இங்கே கல்லில் உள்ள உளி பட்ட மார்க்குகள் மல்லை குடைவரைகளில் நாம் முன்னர் நாம் கண்ட மார்க்குகளை விட சற்று வேறுபட்டு காட்சி அளிக்கின்றன.

படங்கள்: அர்விந்த் வெங்கட்ராமன்


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

தந்தையும் மகனும் சிற்பிகளாக இருப்பது பெரும் பிரச்சனையாக இருந்திருக்கும் போல – திருமலைப்புரம்

அந்த காலத்தில் தந்தையும் மகனும் சிற்பிகளாய் இருப்பது பலருக்கு கண்ணுறுத்தலாக இருந்திருக்கும் போல ! தந்தை செய்த சிற்பத்தில் மகன் குறை கண்டுபிடிப்பதும் அதனால் தந்தை தன கையை தானே வெட்டி எறிவது போல பல ( கட்டுக்) கதைகள் எதோ ஒரு ஒற்றில் கேட்டால் பரவாயில்லை – ஊருக்கு ஊர் இதே கதையை அந்த ஊரில் உடந்தை சிற்ப்பத்துடன் ( உள்ளே தேரை இருந்தது தான் அந்த குறையாம் !) இந்த கதையை சொல்லி சொல்லி பரப்பி விடுகிறார்கள். ஆனால் நல்ல வேலையாக இந்த முறை புதிதாக ஒரு கதையை கேட்டோம் !

தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருந்தாலும் வழி கேட்டுக்கொண்டு – அதற்க்கு ஊர்காரர்களுக்கு வழி தெரியவேண்டுமே ! தட்டி தடவி, திருமலாபுரம் என்று இன்று அழைக்கப்படும் திருமலைப்புரம் ( திருநெல்வேலி – கல்லிடைக்குறிச்சி அருகில் சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது) சென்றடையும் போதே பொழுது சாய்ந்துக் கொண்டு இருந்தது.

பெரிய குன்றில் ஒரு புறம் உள்ள பாறை முகத்தில் வெட்டிய குடவரை பளிச்சென்று தெரிகிறது. அதன் முன்னே அந்த சிற்பி / மன்னன் நின்று பார்க்கும் பொது தங்கள் மனக்கண்ணில் அவர்கள் கைவண்ணம் ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னரும் நிலைத்து நிற்கும் என்று எண்ணி இருப்பார்களா ?

சின்ன குடவரை தான். இரு தூண்கள் – இரு அரை தூண்கள் ( வட திசை நோக்கி ஒரு முடிவுற்ற குடவரை உள்ள்ளது – தெற்கு நோக்கி ஒன்று முடிவு பெறாத நிலையிலும் உள்ளது. அந்த முடிவு பெறாத குடைவரையை வைத்து தான் இந்த கதை வளர்கிறது – அதை பின்னர் பார்ப்போம் )

முதல்லில் வடக்கு குடைவரையை இன்னும் அருகில் சென்று பார்ப்போம். தூண்களில் அழகிய வேலைப்பாடுகள் உள்ளன.

அருமையான குடவரையில் நடு நாயகமாக தாய்ப்பாறையில்f செதுக்கிய நந்தி இருந்திருக்க வேண்டும். பாவம், அதன் கால்கள் மட்டுமே நமக்கு எஞ்சி உள்ளன. எவ்வளவு கடினமான வேலைப்படாக அது இருந்திருக்கவேண்டும் ! அடுத்த குடைவரையை பார்க்கும் பொது இது பற்றி நமக்கு மேலும் புரியும்.

இந்த குடைவரையின் காலம் சுமார் ஏழாம் நூற்றாண்டின் பின்பகுதிக்கு கணக்கிடப் படுகிறது. இது பாண்டியர் பாணியில் உள்ளது. கருவறையில் உள்ள சிவலிங்கம் தாய்பாரையில் செதுக்கப்பட்டிருப்பது, விநாயகர் சிற்பம் இருப்பது மற்றும் உள்ளே இருக்கும் மற்ற சிற்ப்பங்களின் பாணியை கொண்டும் இவற்றை நாம் அறியலாம்.

இரு வாயிற் காவலர்களில் இடது புறம் இருப்பவர் முறுக்கிய மீசையுடன் கம்பீரமாக தோற்றம் அளிக்கிறார்.




உட்சுவர்களில் நான்முகன் , பெருமாள் மற்றும் சிவபெருமானின் அருமையான ஆடல் சிற்பம் உள்ளது.


ஆடல் சிற்பம் என்றால் புகழ் பெற்ற நடராஜர் வடிவம் அல்ல – ஆனால் சதுர கோணத்தில், கையில் நடன நூலை பிடித்து அவர் ஆடும் அழகு மிக அருமை. அவருக்கு இருபுறமும் பூத கணங்கள் உள்ளது – வலது புறம் உள்ள கணம் சிதைந்து விட்டது – இடது புறம் இருப்பவர் சங்கீதம் சார்ந்த ஆராய்ச்சியாளர்களுக்கு மிகவும் முக்கியமானவர். இந்த ஆடல் காட்சி மற்றும் பூதகணத்தை, அடுத்த பகுதியில் பார்ப்போம்.

இங்கே குறிப்பிட வேண்டியது இந்த சிற்பங்களின் அளவு – மேல் பாகம், முகம் – அணிகலன் எல்லாம் அழகாக இருந்தாலும் – இடுப்பு மற்றும் கால்கள் சற்றே அளவில் குறைவாக இருப்பது சற்று அழகு குறைவாக காட்சி அளிக்கின்றன.

சுவர்களில் ஒரு சில இடங்களில் ஓவியங்கள் இருந்த தடயங்கள் தெரிகின்றன. இந்த குடைவரைகள் முழுவதும் அந்த நாளில் ஓவியங்களால் அலங்கரிக்கப் பட்டிருந்திருக்கும் !! இன்னும் ஒரு புதமை இங்கே மும்மூர்த்திகளின் வடிவங்களின் நடுவில் இடத்தை பிரிக்க தூண்களை போலவே கல்லில் செதுக்கி இருப்பது.


பொழுது சாயும் நேரம் ஆகா, விடு விடு என்று அடுத்த குடைவரையை காண சென்றோம். அதற்குள் பெரிய கூட்டம் சேர்ந்துவிட்டது. எதோ பாரதிராஜா போல நாங்களும் படம் எடுக்கு வந்திருக்கிறோம் என்று நினைத்தார்களோ என்னமோ ! அந்த குடவரையில் பார்ப்பதுக்கு ஒன்றுமே இல்லை. அதை பூட்டி வைத்துள்ளனர் – சாவி இங்கே இல்லை, என்றெல்லாம் சொன்னார்கள்.



வெளியில் உள்ள அரைகுறை சிற்பத்தை ( விநாயகரா??) பார்க்கும் பொது அவர்கள் சொல்வதில் தப்பு இல்லை என்று தான் தோன்றியது. நாங்கள் அந்த பூட்டிய கதவின் கம்பிகளுக்குள் தலையை திருப்பி திருப்பி உள்ளே பார்க்க முயற்சி செய்த எங்களை பார்த்து அவர்களுக்கு கருணை பிறக்கு – தொல்லியல் துறை தொலைபேசி என்னை தந்தார்கள். உடனே போன் செய்து வழக்கம் போல ” எனக்கு ஆசி இல் @#@#@#@#@# சாரை தெரியும் ” என்று ஒரு இரு பிரமுகர்களின் பெயரை சொல்லியவுடன் அவர் ” இதோ வருகிறேன் என்றார் !”

அப்படி அவர் வருவதற்கு காற்று நிற்கும் பொது தான் அந்த ஆடு மேய்ப்பவர்கள் அந்த ” கதையை” சொன்னார்கள். முதல் குடைவரையை செதுக்கிய சிறப்பிக்கு மிகவும் சுட்டியான மகன் ஒருவன் இருந்தானாம். அவன் தன தந்தைக்கு தினமும் வீட்டிலிருந்து ” காபி ” எடுத்து வருவானாம். அவனுக்கு தந்தையின் கலையை கற்க பெரும் ஆசை. அதன்படி அவன் அப்பாவுக்கு காபி வைத்துவிட்டு அவர் செதுக்குவதை பார்த்து மனதில் பதிந்து – மலையின் அடுத்த பக்கம் சென்று அதே போல செதுக்க துவங்கினானாம். தந்தைக்கு இது தெரியாமல் இருக்க தந்தை சுத்தியால் உலையை அடிக்கும் அதே தருணத்தில் தானும் அடிப்பானாம். அப்படியே பல காலம் செல்ல – ஒரு நாள் தந்தை திடீரேனே செதுக்குவதை நிறுத்த – மகனின் உளியின் ஓசை அவருக்கு கேட்டு விட்டது. என்ன கடக்கிறது என்று பாக்க சத்தம் வந்த இடத்தை நோக்கி அவர் செல்ல – அங்கே தனது வேலையை யாரோ காப்பி அடிப்பதை கண்டு கோபம் கொண்டார். கோபம் கண்ணை மறைக்க கல்லின் மேலே குடிந்து வேலை செய்வது தன மகன் என்று தெரியாமல் சுத்தியல் கொண்டு அடித்து கொன்றுவிட்டாராம் !!

அப்போது சாவி வந்துவிட்டது, உள்ளே சென்று நிறை பெறாத அந்த குடவரையில் ” ஒன்றுமே இல்லாத ” சுவர்களில் அந்த காலத்தில் எப்படி இந்த கல்லை குடைந்தார்கள் என்று அறிய உதவுகிறது. குறிப்பாக அந்த தாய்பாரை நந்தி …இங்கே அதற்க்கு நடுவில் எப்படி கல்லை விட்டு சுற்றி குடைந்து வருவது தெரிகிறது.

குடவரையில் எப்படி கல்லை குடைந்து இன்னும் ஆழம் செல்கிறார்கள் என்றும் அறியலாம். ஒன்று நாம் கவனிக்க வேண்டும் – இங்கே கல்லில் உள்ள உளி பட்ட மார்க்குகள் மல்லை குடைவரைகளில் நாம் முன்னர் நாம் கண்ட மார்க்குகளை விட சற்று வேறுபட்டு காட்சி அளிக்கின்றன.

படங்கள்: அர்விந்த் வெங்கட்ராமன்


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

செப்புத்திருமேனியின் ஆபரணங்கள்

தங்கத்தின் விலை மளமளவென்று ஏறுவதை கண்டு பதட்டப்படாமல் எப்படி இருக்க முடியும். அப்படி என்னதான் இந்த மஞ்சள் உலோகத்தின் மீது நம்மவர்களுக்கு ஒரு பித்தோ ! போதா குறைக்கு பெண்களுக்கு போட்டி இட்டு இன்று ஆண்களும் கழுத்திலும் கையிலும் – குறிப்பாக நமது சினிமாவில் வரும் வில்லன்கள் — அப்பப்பா அவற்றை கொண்டு கணத்தில் தண்ணீர் இறைக்கலாம் – அப்படி தாம்பு கயிறு போல தடி தடி செயின்கள் – அது என்ன செயின்? அந்நாள்களில் இவற்றின் பெயர்கள் என்ன ?

கண்டிகை , சாரப்பள்ளி , சாவடி , புலிப்பல் தாலி , தோள்மாலை , வாகு மாலை , தோள்வளை , கடக வளை இப்படி அடிக்கிக் கொண்டே போகிறது திரு கணபதி ஸ்தபதி அவர்களின் நூல் குறிப்பு. இவை பார்பதற்கு எப்படி இருக்கும் என்று ஆசையாக உள்ளதா? இதோ நண்பர் ஷாஸ்வத் உதவியுடன் இந்த அற்புத அர்தாரி வடிவத்தின் அணிகலன்களின் பவனியை ரசிப்போம்.

முதலில் என்ன என்ன இருக்கிறது என்று பார்ப்போம். .

இவ்வளவும் இந்த செப்புச் சிலையிலா இருக்கிறது என்று மலைக்க வேண்டாம். இதோ பாருங்கள்.

கண்டிகை – சிறிய மாலை போல கழுத்துக்கு மிக அருகில் உள்ளது. பெரிய பென்டன்ட் எல்லாம் கிடையாது – நடுவில் ஒரு பெரிய மணி , அதனை ஒட்டி சிறு மணிகள்.

அடுத்து சாரப்பள்ளி, பெரிதாக மேல் பக்கம் முத்துக்களை கொண்டும், அடியில் இலை வடிவ அலங்காரம் கொண்டது.

புலிப்பல் தாலி – புலியின் பல்லை ஒரு சிறு கோடியில் கட்டி இருப்பது தெரிகிறதா? இங்கே ஒன்றை நாம் கவனிக்க வேண்டும். இந்த அணிகலனை ஆண் பெண் இருவருமே அணியலாம் என்று இருந்தாலும், இந்த அர்த்தநாரி வடிவத்தில் பாதி புலிப்பல் தாலியும் – சிவன் பாகத்தில் , அம்மையின் பாகத்தில் சாவடி போலும் காட்டி உள்ளனர். சாவடி என்னும் அணிகலன் கண்டிகையை விட சற்று பெரிதாகவும் நாடு நடுவில் பூவைத்தது போன்ற வேலைப்பாடும் கொண்டது.

இவற்றை தவிர தோள்மீது முன்பக்கம் தொங்கும் விதம் ஒரு அணிகலன் உள்ளது. இது தான் வாகுமாலை. அதை ஒட்டி தோள்பட்டைகளின் மீது படரும் வண்ணம் இருக்கும் அணிகலன் தோள்மாலை.

அழகிய பூணுல், அதன் நடுவில் பிரம்மமுடிச்சும் உள்ளது.

இன்னும் கையிலும் இடுப்பிலும் உள்ள அணிகலன்களையும் பாருங்கள்.

மேல் கைகளில் தோள்வளை ( கேய்யுரம் !) அதன் அடியில் கடக வளை உள்ளது.

இடுப்பின் அழகிய வளைவுகளை எடுத்துக்கட்டும் வண்ணம் உதர பந்தம் உள்ளது.

பல்லவர் காலத்தில் புரிநூல் மூன்றாக பிரியும். சிறிய உர்ஸ் சூத்ரம், நடுவில் யக்நோபவீதம் ( இரண்டுமே இந்த சோழர் திருமேனியில் உள்ளன ) மற்றும் ஸ்தான சூத்ரம் – இங்கே காணப் படவில்லை.

இன்னும் எளிதாக புரிய இந்த அறிய கொங்கு பெருமாள் திருமேனியை பாருங்கள்.,

என்ன சொல்றீங்க…இந்த டிசைன்ல அம்மணிக்கு ரெண்டு செஞ்சி போடலாமா?

சர்ச்சைச் சிற்பங்கள்- பாகம் மூன்று – கங்காளர்

சர்ச்சைச் சிற்பங்கள் தொடரில் இன்று மீண்டும் ஒரு பெரிய சர்ச்சைச் சிற்பம் – கங்காள முர்த்தி. கதைக்கு செல்வதற்கு முன்னர் சிற்ப வடிவத்தின் அம்சங்களை பார்த்துவிடுவோம். வெகுவாக பிக்ஷாடனர் வடிவத்துடன் ஒத்துப்போவதால் இரு வடிவங்களுக்கு இடையே பலமுறை குழப்பம் வருவது இயல்புதான்.
கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள இரு வடிவங்களையும் பாருங்கள்.

முதல் வித்தியாசம் என்று பார்த்தல் – துணி தான். பிக்ஷாடனர் பொதுவாக பிறந்த மேனியாக ஒரு சில பாம்புகளை மட்டுமே உடுத்தி இருப்பார். கங்காளற் மேல் துணியாக குதிரை அல்லது கழுதையின் தோல் அணிந்தும், கீழுக்கு சனலாலான துணி அதுவும் முட்டிக்கு மேல் வரைக்குமே அணிய வேண்டும். இருவருமே தடிமனான மாற பாத ரக்ஷைகள் அணிவார்கள்.

அடுத்த வித்தியாசம், தலை அலங்காரம். கங்காளற் அழகிய ஜடா மகுடம் ( ஜடையை கொண்டே கிரீடம் போல பின்னி இருப்பது ) வைத்திருப்பார். பிக்ஷாடனர் ஜடா பாரம் அல்லது ஜடா மண்டலம் – பொதுவாக

இப்படங்களை பாருங்கள் – வித்தியாசம் புரியும் …நன்றி

எனினும் அங்கும் இங்கும் சில இடங்களில் பிக்ஷாடனர் ஜடா மகுடதுடனும் காணபடுகிறார். ஒரு வேலை சிற்பி இரு உருவங்களையும் சேர்த்து ஒரு கலவை செய்தாரோ என்னவோ.

நல்ல வேலையாக நமக்கு உதவ இன்னும் சில வித்தியாசங்கள் உள்ளன.

சிவன் கீழ் இடது கையை முதலில் பார்ப்போம். அங்கே கபாலம் இருந்தால் அது பிக்ஷாடனர். தக்க என்ற ஒரு வகை மேளத்தை கொண்டு இருந்தால் அவர் கங்காளற்.

மேலும், கீழ் வலது கரம் மானுக்கு புள் கொடுக்கும் படி இருந்தால் அது பிக்ஷாடனர், கங்காளற் வடிவத்தில் அந்த கை பனா என்ற ஒரு குச்சியை கொண்டு அந்த மேளத்தை கொட்டும் வகையில் இருக்க வேண்டும். அடுத்த கை தான் மானுக்கு புள் கொடுக்க வேண்டும். இப்போது கங்கை கொண்ட சோழபுறது கங்காளற் வடிவத்தில் உள்ள பிரச்சனைக்கு வருவோம்…இங்கே அவருக்கு ஆறு கைகள். அதில் முன் இரண்டும் உடைத்து விட்டன. இருந்தும் அடுத்த வலது கரம் மானுக்கு புள் கொடுப்பதை வைத்து நாம் அவரை அடையாளம் கொள்ளலாம். பின் வலது கை மேலே ஒரு பாம்பை பிடித்துள்ளது.

இரண்டு உருவங்களுமே தங்கள் மேல் இடது கையில் ஒரு தண்டத்தை வைத்துள்ளனர். எனினும் கங்காளற் விடிவதில் இது மிகவும் முக்கியம் – கங்காளம் – எலும்புக் கூடு. பிக்ஷாடனர் கையில் இருக்கும் கபாலம் நான்முகனின் ஐந்தாவது தலையின் ஓடு என்றால் இந்த கங்காளம் கதை இன்னும் சர்ச்சைக்கு உரியது. பிரவ வடிவில் சிவன் பெருமாளை சந்திக்க செல்ல வாயிலில் விஷ்வாக்செனர் அவரை தடுத்து நிறுத்த, சினந்தில் தனது திரிசூலம் கொண்டு அவரை குத்தி அவரது சடலத்தை அதில் தொங்கியவாறே செல்வதாக செல்கிறது கதை. ( இதுவே இது தொடர்பான கதைகளில் கொடூரம் கம்மியாக இருந்தது !) எனினும் முடிவில் விஷ்ணு ( சிலர் லக்ஷ்மி என்கிறார்கள்) உதவியுடன் சிவன் சரியாகி – விஷ்வாக்செனரும் உயிர் பெற்றார் என்று முடிகிறது.

திரு கோபிநாத் ராவ் அவர்களின் சிற்ப நூல் குறிப்பில் Sri Gopinath Rao’s Elements of Hindu Iconography இவ்வாறு கங்காளற் வடிவம் இருக்கவேண்டும் என்று சொல்கிறார்.

“கங்காளற் வடிவத்தில் அவரை சுற்றி நிறைய பெண்களும், பூத கணங்களும் இருக்க தண்டும். அந்த கணங்கள் ஆடிக்கொண்டும், பாடிக்கொண்டும் பல்வேறு இசைக்கருவிகளை வாசித்த வண்ணம் இருக்க வேண்டும். ஒரு கணம் தலையில் ஒரு பெரிய பாத்திரம் ஏந்தி இருக்க வேண்டும் – இதில் கங்காளற் பிச்சை எடுக்கும் உணவு போட பட வேண்டும் – இந்த கணம் அவருக்கு இடது புறம் இருக்க வேண்டும். சுற்றி இருக்கும் பெண்கள் அவர் மீது மோக மயக்கத்தில் அவரை அணைக்க துடிக்கும் வண்ணம் இருக்க வேண்டும். மேலும் ரிஷிகள், தேவர்கள், கந்தர்வர்கள், சித்தர்கள், வித்யாதரர்கள் அவரை சுற்றி அஞ்சலி முத்திரையில் இருக்க வேண்டும். வாயு தெருக்களை பெருக்க, வருணம் நீர் தெளிக்க, மேலே தேவர்கள் மலர்கள் தூவ, ரிஷிகள் மாத்திரம் ஜெபிக்க, சுர்யனும் சந்திரனும் சாமரம் பிடிக்க – நாரதரும் தும்புருவும் இசை வாசிக்க இவர் வளம் வர வேண்டும் ”

சென்ற டிசம்பர் மாதம் திருக்குறுங்குடி சென்ற பொது கோபுர பராமரிப்பு வேலை நடந்துக்கொண்டு இருந்தது – அதனால் சாரங்களில் ஏறி மேல் தலத்தில் உள்ள சிற்ப்பங்களை படம் பிடிக்க முடிந்தது. அங்கே கங்காளற் சிற்பம் இருப்பதை கண்டு வியப்பில் ஆய்ந்தோம்.

கண்டிப்பாக அந்த சிற்பிக்கு நிறைய தைரியம் இருந்திருக்க வேண்டு,.

மேலே நாம் படித்த பெரும்பாலானவை இந்த சிற்பத்திற்கு அப்படியே பொருந்துகின்றன.

அந்த தண்டத்தின் மறு பக்கத்தில் இருக்கும் அந்த பள்ளி / உடும்பு போன்ற விலங்கிற்கு தான் குறிப்பு கிடைக்க வில்லை.

ஒரு வேலை இப்படி முதிகில் ஒரு சடலத்தை சுமந்த பிச்சை கேட்டல் யார் போடுவார்கள் பாவம். அதனால் மதிய உணவை கட்டிக் கொண்டு வந்து விட்டாரோ என்னவோ.

விளையாட்டை இருந்தாலும், இந்த கதைகளை எல்லாம் நாம் அந்த காலத்துக்கு சூழலில் பார்க்க வேண்டும். நவ கண்டம் போன்ற விஷயங்கள் பற்றி படிக்கையில் இந்த குறிப்பு கிடைத்தது தன உயிரை தானே எடுப்பது ” வீரன் மற்றும் நாராயணன் என்னும் சகோதரர்கள் – இரட்டை பிறவிகள் , இருவருமே முதலாம் பராந்தக சோழர் ஆட்சியில் பணிபுரிந்தவர்கள், நெல்லோரே அரசன் விக்கலனை எப்படி கொன்றோம் என்று மன்னர் கேட்டதற்கு இப்படி தான் என்று தானே தங்கள் தலைகளை கொய்தனர் !”


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

சில வினோத ஆயுதங்கள் !

இந்து மதம் என்பது இந்து மகா சமுத்திரத்தை விட மிகவும் ஆழமானது. அதனாலேயே பலரும் அதனை புரிந்துக்கொள்ள எத்தனிப்பதில்லை. அப்படியே முயற்சிக்கும் பலரும் அதன் தோற்றம் எழுத்து வரலாறு ஏன் கேள்வி வழி வரலாற்றையும் கடந்து நீடிப்பதால் தோல்வியுற்றே திரும்புகின்றனர். அப்படி இருக்கையில் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலம் வரை மேலை நாடுகளின் கலை வல்லுனர்கள் இந்திய இந்து மதக் கலைசின்னங்களைப் பற்றி சற்று தாழ்வாகவே பார்த்ததில் தப்பில்லை என்றே தோன்றுகிறது. அதன் பின்னர் மெதுவாக நமது கலையை பற்றி புரிதல் வளர்ந்து இன்று ஒரு நல்ல மதிப்பை பெற்று இருந்தாலும், பொதுவாக அவர்கள் மனதில் அவற்றைப் பற்றிய கேள்விகளே அதிகம். அதை நாம் குற்றம் சொல்லக் கூடாது. இந்தியக் கலையானது அதை ஒட்டிய கதைகளை பிரதிபலித்தது. அதை புரிந்துக்கொள்ள அந்த கதைகளை மட்டும் அல்லாமல் அவற்றை சார்ந்து ஓடிய தத்துவங்களின் புரிதலும் தேவை படுகிறது. அப்படி இல்லாமால் வெறுமனே வந்து கோரை பற்களுடன், கொய்த தலைகளை ஏந்திய கைகளையும், மண்டையோட்டு மாலைகளையும், பூத கணங்கள் சூழ , பத்து கரங்களில் கொடிய ஆயுதங்கள் கொண்ட உருவங்களையெல்லாம் பார்க்கும்போது அவர்களுக்கு ஏற்பட்ட முதல் அபிப்பிராயம் தவறாக இருந்ததில் தப்பில்லைதானே !

அதே மண்ணில் பிறந்து வளர்ந்த நமக்கே, முத்தொழில்களில் அழிக்கும் கடவுள் என்று சிவனை பார்க்கும்போது, இடுகாட்டில் , உடல் முழுவதும் சாம்பலை பூசி, பேய்களுடன் ஆடும் அவனது கோலத்தை ரசிப்பது சற்று கடினமே. அவனது லிங்க ரூபம் அதனை ஒட்டிய கருத்துக்கள் பக்கம் போகவே தேவையில்லை. அதுவும் இந்த காளாமுகர், காபாலிகர் , பாசுபதர், பைரவர் வழிபாடு என்று இப்படிஅடுக்கிக் கொண்டே போகலாம்.

எனினும் எப்படி இருந்திருக்கலாம் என்ற கேள்வி கிளம்புவதை ஆதரிக்கும் இந்த மதத்தின் தத்துவார்த்த பின்புலம் அழகு.

சிற்பக்கலையில் ஒரு சில இடங்களில் பழைய கோட்பாடுகள் அங்காங்கே தென்படுகின்றன. திரு கணபதி ஸ்தபதி அவர்களின் அருமையான நூலை கொண்டு சிலவற்றை ஆராயாலாம் Indian Sculpture and Iconography .

ஹளபேடு கோயிலில் எங்கும் சிற்பம் தான். அதில் ஒரு சிவ பைரவர் ரூபம் நமது ஆராய்ச்சிக்கு இன்று உதவுகிறது.

ஹோய்சலர்களின் கலை – ஒரு சிறு இடம் கூட விடாமல் எங்கு பார்த்தாலும் ஏதாவது இருக்கும். அரக்க பரக்க வரும் சுற்றுலா பயணிகள் வரிசையில் நின்று பார்க்க கூட நேரம் இல்லாமல் வெளியே ஆம்னி பஸ் ஹார்ன் சத்தம் கேட்டு ஓடி ஓடிப் பார்ப்பதே அதிகம். அப்படி இருக்கையில் இந்த சிலையை நின்று பார்ப்பவர் சற்று அதிர்ச்சி அடைவது சிவனின் இடது கையில் இருக்கும் ஆயுதத்தை கண்டு.

என்ன இது என்று யோசித்துக்கொண்டே , இதெல்லாம் இந்த நூலில் இருக்குமா என்ற சந்தேகத்துடனேயே புரட்டினேன்.

அங்கே


” கட்வங்கம் : இந்த தடி கால் துடை எலும்பினால் செய்யப்பட்டது. அதன் மேலே ஒரு மண்டையோடு பொருத்தப்பட்டு இருக்கும். தடியை சுற்றி ஒரு பாம்பு மண்டையோட்டின் கண் துவாரத்தின் வழி வெளியே வந்து படம் எடுத்து ஆடும். சில இடங்களில் தடி மரத்தால் ஆனதாகவும் இருக்கலாம். பொதுவாக காபாலிக வடிவங்களில் இதனை காணாலாம். இது சிவனின் ஆயுதம். இது சில யோகிகள் மற்றும் ரிஷிகள் கையிலும் இருக்கும். தடி இரண்டு முக தூரமும், இரண்டு விரல் தடிமனும், மண்டையோடு ஐந்து விரல் அகலமும் ஏழு விரல் நீளமும் இருக்க வேண்டும் “

அது மட்டும் இல்லை கூடவே படமும் அப்படியே அச்சில் எடுத்தவாறு இருந்தது. நண்பர் ஓவியர் திரு ராகவேந்திர பிரசாத் அவர்கள் உதவியுடன் இதோ நமக்கு இன்னும் தெளிவான படம்.

இந்தி பற்றி விவாதிக்கும் பொது நண்பர் திரு சுவாமிநாதன் அவர்கள் சோமநாதபுரம் நான்முகன் சிற்பம் ஒன்றைக் கொடுத்து உதவினார். அங்கே இன்னும் ஒரு அபூர்வ வகை ஆயுதம்.

பிரம்மாவின் வலது கையில் உள்ள கருவியை உற்று பாருங்கள்.

மீண்டும் பிரசாத் உதவியுடன்

படைக்கும் கடவுளின் கையில் இருக்கும் இது என்ன என்பதே அவரது கேள்வி.

மீண்டும் நூலைப் புரட்டினேன்.

“சிறுக்’ , ’சுருவம்’ : இவை கரண்டிகள். பிரம்மனின் கருவிகள். யாக சாலையில் யாக குண்டத்தில் தீக்கு நெய்யை உற்ற உதவும் கருவிகள் இவை. யாகம் முடியும் கடை நாளில் பூர்ணஹுதி என்னும் வழக்கில் பல்வேறு காணிக்கைகளை யாக குண்டத்தில் போட இந்தக் கருவிகள் உதவும். ’சிறுக்’ என்பது கட்டையால் ஆன கரண்டியாகும். சுருவம் சற்று வேறுபடும். சதுர வடிவில் இருக்கும் இதன் தலையில் பசு , யானை மற்றும் இதர பிராணிகளின் தலைகளின் வடிவங்கள் அலங்கரிக்கும். இவற்றின் அளவு ஒரு முழமாக இருக்கும். ”

மிகவும் அருமையான வடிவம். அது எழுப்பும் கேள்விகளும் அதிகம். எனினும் தற்போது எனது தேடல் யானை தலையுடன் இருக்கும் ஒரு சுருவம்!!


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment