“கிருஷ்ணர் மாதிரியே புல்லாங்குழல் வைத்திருக்கும் நாயனார் ஒருவரும் உண்டு.” திரு கண்ணன் அவர்கள் சென்ற பதிவுக்கு இப்படி ஒரு மறுமொழி தந்தவுடன், யார் அவர் என்று உடனே தேடலை ஆரம்பித்தேன். அதிஷ்ட வசமாக நண்பர் திரு அர்விந்த் வெங்கடராமன் சென்ற வாரம் தஞ்சை சென்ற பொது தராசுரமும் சென்றார். அவரிடம் கேட்டவுடன் கிடைத்தது சிற்பம். அதன் விளைவே இந்த பதிவு. நாம் பார்க்கவிருக்கும் நாயனார் ஆனாயர்.
சிற்பத்தை பாருங்கள்
திரு கண்ணன் அவர்கள் சொன்னதில் தப்பே இல்லை. கண்ணன் சிற்பம் என்றே நினைக்க தோன்றும். ஆனால் அருகில் இருப்பது அம்மை அப்பன் – பெரியபுராணம் சிற்பங்கள் இவை.
நாயனார் கதையை படிக்க இங்கே செல்லுங்கள்
http://www.shaivam.org/naaanaay.html
எல்லாவற்றிற்கும் தாயானவரும், சடையில் பிறை சூடிய தூயவரும், ஆகிய சிவபிரானுடைய திருவடிகளைத் தம் மனத்தில் விடாது வைத்து, அவருடைய பழமை வாய்ந்த பெருமைகளை வேய்ங்குழல் இசையால் பரவும், மேல் மழநாட்டு நீர்வளம் மிக்க திருமங்கலத்தில் தோன்றிய ஆனாயர், என்னை உவகையுடன் ஆட்கொண்டு அருளியவராவர்.
சரி, தேவாரம் வரிகளை பார்ப்போம்
http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1214&padhi=72&startLimit=22&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC
ஏழுவிரல் இடையிட்ட
இன்னிசைவங் கியமெடுத்துத்
தாழுமலர் வரிவண்டு
தாதுபிடிப் பனபோலச்
சூழுமுரன் றெழநின்று
தூயபெருந் தனித்துளையில்
வாழியநந் தோன்றலார்
மணியதரம் வைத்தூத.
ஏழு விரல்கள் இடையீடுபடத் துளையிட்ட இனிய ஓசையையுடைய வேய்ங்குழலினை ஆனாய நாயனார் எடுத்துப் பூக்களில் தேனை உண்டிடப் படியும் வண்டு எழுவதும் இருப்பதும் போல, அங்குள்ள துளைகளில் தமது விரல்களை வைத்து, எடுத்துச் சுருதி பெற நிற்றலும் எழுதலும் ஆகிய இத்தன்மைகளைச் செய்து, தூய பெரிய துளையில் பெருவாழ்வுடையராய நம் தலைவர் ஆனாயர், தமது வாயிதழ் மேல் வைத்து ஊத,
ஆஹா, குழலை வாசிக்கும் பொது விரல்களின் அசைவை பூவின் மீது ஆடும் வண்டினை உவமை படுத்துவது அருமை.
http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1214&padhi=72&startLimit=30&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC
ஆடுமயில் இனங்களும்அங்
கசைவயர்ந்து மருங்கணுக
ஊடுசெவி யிசைநிறைந்த
உள்ளமொடு புள்ளினமும்
மாடுபடிந் துணர்வொழிய
மருங்குதொழில் புரிந்தொழுகும்
கூடியவன் கோவலரும்
குறைவினையின் துறைநின்றார்.
ஆடுகின்றமயில் இனங்களும் தம் ஆடலை மறந்து அணையவும், காதூடு சென்ற இசையமுதம் நிறைந்த உள்ளத்துடன் பறவைகளின் இனமும் பக்கத்தில் வந்து தமது உணர்வு ஒழிந்திடவும், அவர் அருகில் கோல்தொழில் புரிந்து பசுநிரைகாக்கும் வலிமையுடன் கூடிய இடையர்களும் தாம் எடுத்த செயலை மறந்து குறைவினையாக விடுத்து நின்ற நிலையில், இசை கேட்டு மெய்ம் மறந்து உருகி நின்றனர்.
http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1214&padhi=72&startLimit=37&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC
ஆனாயர் குழலோசை
கேட்டருளி அருட்கருணை
தானாய திருவுள்ளம்
உடையதவ வல்லியுடன்
கானாதி காரணராம்
கண்ணுதலார் விடையுகைத்து
வானாறு வந்தணைந்தார்
மதிநாறும் சடைதாழ.
ஆனாய நாயனாரின் குழலிசையைக் கேட்டருளி, அருள் வயத்ததாய கருணையையே திருவுள்ளமாகக் கொண்டிருக் கும் தவக் கொடியாய உமையம்மையாருடன், இசைக்கலைக் கெல் லாம் மூலகாரணராய கண்ணுதற் கடவுள், தமது ஆனேற்றைச் செலுத்தி, தமது அழகுடைய இனிமை மணக்கும் இளம்பிறை அணிந்த திருச்சடை தாழ்ந்திட, வான்வழியாக அவ்விடத்து வந்தணைந்தார்.
http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1214&padhi=72&startLimit=39&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC
முன்னின்ற மழவிடைமேல்
முதல்வனார் எப்பொழுதும்
செந்நின்ற மனப்பெரியோர்
திருக்குழல்வா சனைகேட்க
இந்நின்ற நிலையேநம்
பாலணைவாய் எனஅவரும்
அந்நின்ற நிலைபெயர்ப்பார்
ஐயர்திரு மருங்கணைந்தார்.
முன்னாக ஆனேற்றின்மீது அமர்ந்தருளிவந்த முதல்வனாராய சிவபெருமான், செவ்விதாய மனமுடைய ஆனாய நாயனாரின் வேய்ங்குழலின் வாசித்தலை எக்காலத்தும் கேட்டருள விரும்பி, அவரை நோக்கி, `இங்கு நீ நின்ற இந்நிலையேயாக எம் முடன் அணைந்து வந்திடுவாய்`, எனத் திருவருள் புரிந்திடலும், அதனைக் கேட்டருளிய ஆனாய நாயனாரும் தாம் அங்கிருந்தும் பெயர்ந்து, தலைவராய பெருமானாரின் அருகணைந்தார்.
அப்பாடா, என்ன அருமையான வரிகள்.