இந்த பதிவு சரியாக உருவாக ஆறு மாதங்கள் எடுத்துக் கொண்டது. முதல் முதலில் சென்னையில் டிசம்பர் மாதத்தில் திரு சிவராமகிருஷ்ணன் அவர்களின் நிகழ்ச்சியில் இந்த புடைப்புச் சிற்பத்தை பார்த்தேன். குடந்தை நாகேஸ்வரன் கோயில் சிற்பம். அருமையாக விளக்கினார். பின்னர் மார்ச் மாதம் நானும் அரவிந்தும் படம் பிடிக்க குடந்தை சென்றபோது பலத்த மழை. எனினும் சிற்பத்துக்கு் தன்னை பற்றி கண்டிப்பாக பதிவு வர வேண்டும் எனும் ஆசை போலும். ஒரே மாதத்தில் ( சென்ற மாதம் ) முதலில் இரண்டு நண்பர்களிடம் இருந்து – திரு K.S. சங்கரநாராயணன் அவர்கள் மற்றும் திரு ஹரி கிருஷ்ணன் அவர்களிடம் இருந்தும் இதே சிற்பம் கிடைத்தது. பிறகு நண்பர் அர்விந்த் மற்றும் அசோக் இதற்கென்றே குடந்தை சென்று படம் எடுத்து தந்தனர். இவற்றை கொண்டு நாம் ஒரு மேலே செல்வோம்.
முன்னரே, புள்ளமங்கையில் இந்த சிற்பத்தை பார்த்தோம். எனினும் பாதி தான் எஞ்சி உள்ளது – சிமெண்ட் கொண்டு ஒரு சுவர் கட்டி சிதைத்து விட்டனர். ( தகவலுக்கு நன்றி சதீஷ் மற்றும் அர்விந்த்)
அருகில் சென்று சிற்பத்தை பார்க்கும் முன், முதலில் ராமாயண கதையை ஒருமுறைக்கு இரு முறை – வால்மீகி மற்றும் கம்பனின் வர்ணனைகளை பார்த்து விடுவோம். சிறு படலம் என்றாலும் மிக அழகிய தருணம். முதலில் குகன் என்றவுடனே நம் கண்ணில் வருவது எளிமையான படகோட்டி உருவம் தான். அவன் சாதாரண படகோட்டியா . மேலே படியுங்கள். வால்மீகி ராமாயணத்தில்
http://www.valmikiramayan.net/ayodhya/sarga52/ayodhya_52_frame.htm
sa tu raamasya vachanam nishamya pratigR^ihya cha |
sthapatistuurNamaahuya sachivaanidamabraviit || 2-52-5
ராமன் படகு கொண்டு வா என்றதும், குகன் தனது மந்திரிகளை கூப்பிட்டு இவ்வாறு கூறினான்
asya vaahanasamyuktaam karNagraahavatiim shubhaam |
suprataaraam dR^iDhaam tiirkhe shiigram naavamupaahara || 2-52-6
ஒரு அழகிய படகு, நல்லக் கட்டுமானத்துடன் விரைந்து செல்லும் படகு, நல்ல படகோட்டியுடன், இந்த கரைக்கு கொண்டுவாருங்கள் , இந்த நாயகனை அந்தப் பக்கம் எடுத்துச் செல்ல வேண்டும்
tam nishamya samaadesham guhaamaatyagaNo mahaan |
upohya ruchiraam naavam guhaaya pratyavedayat || 2-52-7
குகனின் கட்டளையைக் கேட்டவுடன், அவனது முதல் மந்திரி ஒரு அருமையான படகை கரைக்கு கொண்டு வந்தான்
tataH tam samanuj~naaya guham ikSvaaku nandanaH |
jagaama tuurNam avyagraH sabhaaryaH saha lakSmaNaH || 2-52-73
இவ்வாறு குகனுக்கு நல்ல அறிவுரை கூறிவிட்டு, அவனிடம் பிரியா விடை பெற்று, ராமன் தனது மனைவியுடனும், தம்பியுடனும் புறப்பட்டார்.
anuj~naaya sumantram ca sabalam caiva tam guham |
aasthaaya naavam raamaH tu codayaam aasa naavikaan || 2-52-80
குகனுக்கும் சுமந்திரனுக்கும் விடை கொடுத்துவிட்டு, ராமன் படகில் அமர்ந்து , படகோட்டியை புறப்படுமாறு உத்தரவிட்டான்
வால்மீகியில் அப்படி இருக்க, நாம் கம்பனின் வரிகளை பார்ப்போம்.
http://www.tamilkalanjiyam.com/literatures/kambar/ramayanam/gugappadalam.html
குகன் நாவாய் கொணர, மூவரும் கங்கையைக் கடத்தல்
‘விடு, நனி கடிது’ என்றான்; மெய் உயிர் அனையானும்,
முடுகினன், நெடு நாவாய்; முரி திரை நெடு நீர்வாய்;
கடிதினின், மட அன்னக் கதிஅது செல, நின்றார்
இடர் உற, மறையோரும் எரி உறு மெழுகு ஆனார். 34
பால் உடை மொழியாளும், பகலவன் அனையானும்,
சேலுடை நெடு நல் நீர் சிந்தினர், விளையாட;
தோலுடை நிமிர் கோலின் துழவிட, எழு நாவாய்,
காலுடை நெடு ஞெண்டின், சென்றது கடிது அம்மா!
இராமன் குகனிடம் சித்திரகூடம் செல்லும் வழி பற்றி வினவுதல்
குகனை அவன் இனத்தாருடன் இருக்க இராமன் பணித்தல்
‘துன்பு உளதுஎனின் அன்றோ சுகம் உளது? அது அன்றிப்
பின்பு உளது; “இடை, மன்னும் பிரிவு உளது” என, உன்னேல்;
முன்பு உளெம், ஒரு நால்வேம்; முடிவு உளது என உன்னா
அன்பு உள, இனி, நாம் ஓர் ஐவர்கள் உளர் ஆனோம்;
இப்போது நாம் இரு படைப்புகளிலும் உள்ள வித்தியாசத்தை பார்க்கிறோம். கம்பனின் வர்ணனையில் குகன் ராமனோடு கங்கையை கடக்கிறான். பின்னரே ராமன் அவன் அன்பை கண்டு தன் தம்பியாக ஏற்கிறான்.
இரு வரிகளை நாம் மீண்டும் படிக்க வேண்டும் : தோலுடை நிமிர் கோலின் துழவிட, எழு நாவாய்,
காலுடை நெடு ஞெண்டின், சென்றது கடிது அம்மா!
நிமிர் கோலின். அடுத்து நண்டு போல படகு சென்றது என்கிறார். அப்போது நண்டு என்பதை போல, பல பேர் துடுப்பு போடுவது போல காட்சி தெரிகிறது. இதை நமது சிற்பி , காட்சிக்கு மிகவும் தேவையானவை மற்றும் வைத்துக் கொண்டான் போல. எப்படி ? அப்போது நிமிர் கோலின் உதவி கொண்டு படகில் இருப்பது குகன்.
முழு பலத்தையும் கொண்டு ஊன்று கோலை பின்னால் தள்ளி, படகினை முன்னால் நகர்த்தும் காட்சி – இன்றைக்கும் இந்த பாணி இருப்பது அருமை.
அடுத்து படகில் இருக்கும் மற்றவர் – ராமர், சீதை, லக்ஷ்மணன்
( புள்ளமங்கையில் சிமெண்ட் போட்டு இளவலை மறைத்து விட்டனர் )
இரு சிற்பங்களில் ஒரு சிறு வித்தியாசம் உள்ளது. குகன், ராமர் திரும்பி நிற்பது மட்டும் அல்ல. படகை செலுத்துபவன் தவிர மற்றவர் நின்ற கோலத்தில் முழு அளவை பாருங்கள்.
புள்ளமங்கையில் – படகு மேல் சரியாக நிற்பது போல உள்ளது.
ஆனால் நாகேஸ்வரன் கோயில் சிற்பத்தில் நீளம் அடி படுகிறது.
எது சரியான காட்சி அமைப்பு. படகு நீரில் செல்லும்போது, சற்று உள்ளே ஆழ்ந்து அமுங்கி செல்லும் அல்லவா. இந்த படத்தில் ( பழைய படம் ) அந்தமான் தீவில் ஒரு மீன்பிடி படகு

இதில் படகின் நடுவில் இருப்பவர் உயரம், எப்படி படகின் உள் வாங்குதல் தெரிகின்றது, படகை செலுத்துபவன் எப்படி விளிம்பின் மீது ஏறி நிற்கின்றான் என்பதை பாருங்கள்.
இன்னொரு முக்கியமான குறிப்பு என்ன கிடைக்கிறது என்றால், இது பத்தாம் நூற்றாண்டு சிற்பம் என்பதால் இந்தச் சிற்பம் கூட ஒருவகையில் கம்பனின் காலத்தைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிக்கு உதவமுடியும் என்பதே…